கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி - இன்றைய
கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவும் லக்ஷ்மியும் பாரதியை பார்க்க வருகின்றனர். பின் பாரதி கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிற்கு உடம்பு முடியவில்லை என சொல்லி பாரதியை பார்க்க லட்சுமி உடன் வருகின்றனர். அப்போது பாரதி கண்ணம்மாவை பார்த்துவிட்டு எதுவும் பிரச்சனை இல்லை என சொல்கிறார். பின் மருந்துகளை பாரதி எழுதி கொடுக்கிறார். பின் இன்று நல்ல நாள் திருமணம் செய்யவும் விவாகரத்து செய்யவும் நல்ல நாள் என பாரதி சொல்ல, கண்ணம்மா இவர் என்ன சொல்ல வருகிறார் என நினைத்து பார்க்கிறார்.

ஜெயிலில் வெண்பா இருக்க வக்கீல் வருகிறார். சீக்கிரமாக என்னை வெளியே எடுங்க என வெண்பா சொல்ல, முயற்சி செய்கிறேன் என வக்கீல் சொல்கிறார். இங்கே ஒரு வசதியும் இல்லை என்னால் இருக்க முடியாது என வெண்பா சொல்ல, சிறை அப்படி தான் இருக்கும், இன்னும் 15 நாட்களுக்கு அப்படி தான் இருக்கும் அதுக்கு அப்பறம் உங்களை வந்து பார்க்கிறேன் என வக்கீல் கிளம்புகிறார். பின் கண்ணம்மா வீட்டிற்கு கொரியர் ஒன்று வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!!

எங்கிருந்து வந்திருக்கு என கண்ணம்மா கேட்க கோட்டில் இருந்து வந்திருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு கண்ணம்மா அதிர்ச்சி அடைய கோட்டில் இருந்து என்ன வந்திருக்கும் என பிரித்து பார்க்கிறார். அப்போது அதில் வக்கீல் நோட்டீஸ் இருக்க கண்ணம்மா அதை பார்த்து ஷாக்காக்குறார். அன்று அவர் சொன்னதற்கு அர்த்தம் இப்போது தான் புரிகிறது என கண்ணம்மா நினைக்கிறார். பின் கண்ணம்மா அழ தொடங்க எனக்கு ஏன் இவ்வளவு சோதனை செய்யாத தப்பிற்கு நான் எவ்வளவு தண்டனை அனுபவிப்பது என கண்ணம்மா அழுகிறார்.

8 வருஷமாக பிரிந்து இருப்பவர் இப்போது ஏன் விவாகரத்து பண்ண நினைக்கிறார். லட்சுமியிடம் நான் என்ன பதில் சொல்வேன் என தெரியவில்லை. வெண்பா விவாகரத்து செய்ய சொல்லும் போது குழந்தைக்காக சம்மதம் தெரிவித்தேன். நான் எந்த தப்பும் செய்யவில்லை. அவரும் எதுவும் செய்யவில்லை, அவருக்கு சந்தேகம் மட்டும் தான் இருந்தது அது ஒரு நாள் சரியாகும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை என அழுகிறார்.

பொதுமக்கள் மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் – சென்னை மாநகராட்சி வெளியீடு!

பாரதி வெண்பாவை பார்க்க ஜெயிலுக்கு செல்கிறார். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கவில்லை என வெண்பா சொல்ல, நீ வசதியாக வளர்ந்த பொண்ணு கஷ்டமாக தான் இருக்கும் என பாரதி சொல்கிறார். எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம் என வெண்பா சொல்ல, கண்ணம்மாவிற்கு அதான் பரிசு கொடுத்துவிட்டு வந்துருக்கேன். கண்ணம்மாவை விவாகரத்து செய்ய இருக்கிறேன் என பாரதி சொல்ல வெண்பா சந்தோசமாக இருக்கிறார்.

வக்கீல் நோட்டீஸ் அனுப்பிட்டேன் அவளும் அதை வாங்கிட்டாள், இனி கோட்டில் பார்க்க வேண்டியது தான் என பாரதி சொல்கிறார். அவள் உன்னை இப்படி செய்துவிட்டாள், ஹேமாவை பிரிக்க எல்லாம் செய்கிறாள் அதான் விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டேன் என பாரதி சொல்கிறார், நீ செய்வது சரி தான் என வெண்பா சொல்ல, ஏற்கனவே நாங்க பிரிந்து தான் இருக்கோம் இப்போது சட்டப்படி பிரிய போகிறோம் என சொல்கிறார். உன் அம்மா அப்பா இதை ஏற்றுக் கொள்வார்களா என கேட்க அவங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் என்னுடைய முடிவு இது தான் என பாரதி சொல்கிறார்.

சௌந்தர்யா வீட்டில் பாரதியை காணாமல் தேட, அப்போது பாரதி வருகிறார். நீங்க பேசியதை கேட்டேன் நான் மாறிட்டேன் என சொன்னீங்க ஆமாம் மாற தொடங்கிவிட்டேன் என சொல்கிறார். அதான் நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன் என பாரதி சொல்ல, சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். இப்படி மனத்திற்குள்ளையே போட்டு கஷ்டப்படுவதை விட வெளியே சொல்வது சரி தான் என சொல்லி, கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!