பொதுமக்கள் மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் – சென்னை மாநகராட்சி வெளியீடு!
தமிழகத்தில் மழைக்காலங்களில் நோய்கள் வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வழிமுறைகள்:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா முதல் அலை பரவ தொடங்கி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் வேலையில் அடுத்த தாக்குதலாக கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அடுத்ததாக கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து முதல் அலையை விட வேகமாக பரவியது. அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை அறிவித்தது.
கடை உரிமையாளர்களுக்கு சூப்பர் தகவல் – QR கோட் உருவாக்கும் எளிய வழிமுறைகள்!
தற்போது அடுத்த தாக்குதலாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் சென்னை மாநகராட்சி மழை காலத்தில் நோய்கள் வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
- மழை காலத்தில் அதிகம் நோய் பரவும் என்பதால் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
- உணவு உட்கொள்ளும் முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
- வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை கழுவி விட்டு செல்ல வேண்டும்.
- சாலை ஓரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- திறந்த வெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.
- காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு என்று மருத்துவரை அணுகவும்.