பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!!
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீது 50% சதவீத வரி டீசல் மீது 40%-ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வரி குறைப்பு:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதனை அடுத்து மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கொள் முதல் செய்து சில்லறை விற்பனை செய்யும் போது இந்த எரிபொருட்களின் மீது மதிப்பு கூட்டு வரியை விதிக்கின்றன. இந்த நிலையில் பல இடங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 120 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
பொதுமக்கள் மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் – சென்னை மாநகராட்சி வெளியீடு!
இந்நிலையில் பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த வாரம் குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 10 என்ற அளவிலும் மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய கலால் வரி குறைப்புக்கு இணையாக மதிப்புக் கூட்டு வரியும் குறைக்கப்பட்டதன் காரணமாக ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 8.7 அளவுக்கும், டீசல் விலையில் ரூ. 9.52 அளவுக்கும் குறைந்துள்ளது.
EPFO வங்கி கணக்கு எண்ணை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வரி விதிப்பு மாற்றங்களுக்குப் பிறகும் நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.111.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மும்பையில் ரூ. 109.98-க்கும், ஆந்திரத்தில் ரூ. 109.05-க்கும், மத்திய பிரதேசத்தில் ரூ. 107.23-க்கும், பீகாரில் ரூ. 105.90-க்கும், லடாக்கில் ரூ.102.99-க்கும், கா்நாடகத்தில் ரூ.100.58-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.