வெண்பாவை காப்பாற்றிய சாரதி, விவாகரத்து பற்றி வாக்குவாதம் செய்த சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை ரவுடிகள் தாக்க அப்போது சாரதி என்ற ஒருவர் வந்து காப்பாற்றுகிறார். அதனால் வெண்பா அவரை வீட்டிற்கு வர சொல்கிறார். மறுபக்கம் பாரதி விவாகரத்து எண்ணத்தை கைவிட வேண்டும் என சௌந்தர்யா வாக்குவாதம் செய்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா மாப்பிள்ளையை பார்க்க பார்க் வந்திருக்க, அப்போது மாப்பிள்ளையை அடிக்க அடி ஆட்களை செட் செய்கிறார். ஆனால் அந்த ஆட்கள் வெண்பாவிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். அப்போது வெண்பா யாரவது காப்பாற்றுங்கள் என சத்தம் போட அப்போது ரோஹித் சாரதி என்ற ஒருவர் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ரவுடிகளை அடித்து நொறுக்குகிறார். வெண்பா அவர் ரவுடிகளை அடிப்பதை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின் வெண்பா அவரிடம் பேசி அருமையாக சண்டை போட்டீங்க என சொல்கிறார். அப்போது வெண்பா தன்னுடைய அட்ரஸ் கொடுத்து வீட்டிற்கு வர சொல்கிறார். யார் என்றே தெரியாமல் எப்படி என அவர் கேட்க என்னை காப்பாற்றி எவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கீங்க கண்டிப்பாக நீங்க வர வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் ஷர்மிளா வீட்டில் இருக்க வெண்பா கோவமாக வருகிறார். அந்த பொறுப்பில்லாதவனால் பல பிரச்சனை என சொல்கிறார்.
மாப்பிள்ளை வர முடியாது என சொல்லிவிட்டார் அதனால் உனக்கு என்ன என கேட்க, அங்கே நான் அவனுக்காக காத்திருக்க போய் சில ரவுடிகள் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள் அப்போது ஒரு நல்லவர் தான் என்னை காப்பாற்றினார். அவரை நாளை வீட்டிற்கு வர சொல்லிருக்கேன் என சொல்ல, நாளை மாப்பிள்ளை வர இருப்பதாக சொன்னார் என ஷர்மிளா சொல்கிறார். இவ்வளவு நடந்த பின் கூட மாப்பிள்ளை பார்க்க போகிறாய் என வெண்பா கோவித்து கொள்கிறார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
நாளைக்கு மாப்பிள்ளை வருவார் இந்த ஆளும் வந்தால் என்ன ஆகும் என நினைக்கிறார். ஸ்கூலில் லட்சுமி அப்பா அம்மா விவாகரத்து வாங்காமல் தடுப்பது எப்படி என யோசனை செய்ய அப்போது ஹேமா வருகிறார். உன் அப்பாக்கும் என் அம்மாவிற்கும் திருமணம் செய்வது பற்றி யோசனை செய்ய வேண்டும் என லட்சுமி சொல்ல ஆமாம் கண்டிப்பாக நான் இதை இப்படியே விடமாட்டேன் என ஹேமா சொல்கிறார். பின் லட்சுமி அப்பா மனதை மாற்றி விவாகரத்து வாங்க இருப்பதை தடுக்க வேண்டும் என நினைக்கிறார்.
பின் சௌந்தர்யா பாரதியிடம் பேச வேண்டும் என சொல்லி கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்திருப்பதாக சொல்கிறார். கண்ணம்மாவும் நீயும் பிரிந்து இருக்கீங்க ஆனால் விவாகரத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன என கேட்க, நான் அமைதியாக தான் இருந்தேன் ஆனால் நீங்க சேர்த்து வைக்க எனக்கு செய்த காரியம் தான் விவாகரத்து வாங்க வைத்தது என சொல்கிறார். இந்த முடிவை மாற்றிக் கொள் என சொல்ல, முடியாது என பாரதி பிடிவாதமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.