தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடி உபமின் நிலையத்தில் வருகிற ஜூன் 4ம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ஜூன் 4ம் தேதி அன்று பரமக்குடி உபமின் நிலையத்தில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் மின்விபத்துகள் ஏற்படும் விகிதம் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இதனை மின்வாரியம் முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது.
இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது. இதனை தொடர்ந்து இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடி உபமின் நிலையத்தில் பரமக்குடி பீடரில் வருகிற ஜூன் 4ம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் வருகிற ஜூன் 4ம் தேதி அன்று இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான ஓட்டப்பாலம், முத்தாலம்மன் கோவில் படித்துறை, வட்டாட்சியர் அலுவலகம், சுந்தர் நகர் உள்ளிட்ட இடங்களிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் ஜூன் 4ம் தேதி அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் .