பாரதி முடிவை கேட்டு சந்தோசப்பட்ட சண்முகம், அழுது புலம்பும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி பாரதி விவாகரத்து வேண்டாம் என சொன்னதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். கண்ணம்மா அவளுக்கு இனிப்பு செய்து கொடுக்கிறார். அப்போது சண்முகம் வந்து விஷயத்தை கேள்விப்பட்டு சந்தோசப்படுகிறார். பின் சௌந்தர்யாவிடம் அம்மா பற்றி ஹேமா கேட்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியிடம் ஹேமா அடம் பிடித்து விவாகரத்து வேண்டாம் என சொல்கிறார். உடனே வேற வழியில்லாமல் பாரதி விவாகரத்து பண்ணமாட்டேன் என சத்தியம் செய்கிறார். பாரதியின் இந்த முடிவை நினைத்து கண்ணம்மாவும் லக்ஷ்மியும் சந்தோசப்படுகின்றனர். சந்தோசத்தை கொண்டாட கண்ணம்மா கேசரி செய்து கொடுக்கிறார். லட்சுமி அதை பாக்ஸில் வைத்து கொடு நான் எல்லாருக்கும் கொடுக்கிறேன் என சொல்கிறாள்.
பின் கண்ணம்மா வைத்து கொடுத்துவிட்டு பின் கேசரியை எடுத்து சாப்பிடுகிறார். அப்போது என் மகள் நினைத்தது நடந்துவிட்டது என கண்ணம்மா சந்தோசப்படுகிறார். அந்த நேரம் கண்ணம்மாவின் அப்பா சண்முகம் வருகிறார். கண்ணம்மாவை பார்த்து அவர் மிகவும் சந்தோசப்படுகிறார். பிறந்தநாள் அன்று உன்னை பார்த்தது என சொல்ல என்ன அப்பா திடீரென வந்திருக்கீங்க என கண்ணம்மா கேட்கிறார். அகில் மாப்பிள்ளை எனக்கு போன் செய்து விவரத்தை சொன்னார் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
டாக்டர் மாப்பிள்ளை முடிவை மாற்றி கொண்டதை நினைத்து சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். அப்போது லட்சுமி வர கண்ணம்மா சண்முகம் தோளில் சாய்ந்து கொண்டிருக்கிறார். லட்சுமி அதை பார்த்து அதிர்ச்சி அடைய லக்ஷ்மிக்கு எல்லா உண்மையும் தெரியும் என கண்ணம்மா சொல்கிறார். இது தான் உன் தாத்தா என்னுடைய அப்பா என சொல்ல லட்சுமி தாத்தா என ஆசையாக கூப்பிடுகிறார். சண்முகம் கண்ணம்மாவிடம் என் பேத்தியை கொஞ்ச எத்தனை வருடம் ஆகிவிட்டது என சொல்கிறார்.
மறுபக்கம் பாரதி ஏமாற்றியதை நினைத்து வெண்பா அழுகிறார். பின் சாந்தி உங்களை பாரதி தான் ஏமாற்றுகிறார் என சொல்ல என்னை திருமணம் செய்யமாட்டேன் என சொன்னான் இப்போது விவகாரத்தையும் வேண்டாம் என சொல்லிவிட்டான் என அழுகிறார். பின் சாந்தி உங்களுடைய கஷ்டத்தில் எல்லாம் ரோஹித் தான் துணையாக இருக்கிறார். அவரை நீங்க திருமணம் செய்து கொள்ளாமல் அந்த பாரதியை நினைத்து அழுகிறீர்கள் என கேட்க அப்போது ரோஹித் எம்ஜி ஆர் கெட்டப்பில் வந்து வெண்பாவை வெறுப்பேத்துகிறார்.
பின் சௌந்தர்யா பாரதி முடிவை மாற்றிக் கொண்டதை நினைத்து சந்தோசப்படுகிறார். அப்போது ஹேமா வர சந்தோஷத்தில் ஹேமாவை சௌந்தர்யா கொஞ்சுகிறார். பின் ஹேமா சௌந்தர்யாவிடம் அப்பா விவாகரத்து கொடுக்க மாட்டேன் என சொன்னது சரி தான் ஆனால் என் அம்மா பற்றி ஏன் யாரும் சொல்லாமல் இருக்கீங்க என் அம்மா யார் அவர் எப்படி இருப்பார். உண்மையாகவே அவர் இறந்துவிட்டாரா என கேட்க அகில் சித்தப்பா நீங்க சொல்லுங்க என கேட்கிறாள்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செஸ் போட்டி தேதி வெளியீடு!
அதாவது கண்ணம்மா அண்ணி என அகில் சொல்ல ஆமாம் என் அம்மா பெயர் கண்ணம்மா என்று எனக்கு தெரியும் அவங்க எங்கே இருக்காங்க என கேட்கிறாள். ஆனால் சௌந்தர்யா எதுவும் சொல்லாமல் இருக்க ஏன் எல்லாரும் அமைதியாக இருக்கீங்க என கேட்கிறாள். பின் சௌந்தர்யா அதற்கெல்லாம் ஒரு வயது வரும் அதுவரை பொறுமையாக இரு என சொல்கிறார். ஆனால் ஹேமா கேட்காமல் அப்பாவிடம் சாப்பிடாமல் அழுது எப்படி விவாகரத்து வேண்டாம் என சொன்னேனோ அது போல சமையல் அம்மாவை திருமணம் செய்ய அப்பாவிடம் அழுது கேட்க போறேன் என சொல்ல சௌந்தர்யா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.