விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய சாரதி வெண்பா, ஜோடியை பார்த்து சந்தோசப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா பாரதி கோவமாக இருந்ததற்கு காரணம் தெரியாமல் இருக்கிறார். அப்போது ஹேமாவிடம் விவாகரத்து பற்றி யார் சொன்னது என கேட்கிறார். பின் சாரதி வெண்பா ரோட்டில் அடிபட்டு இருப்பவருக்கு உதவி செய்கிறார். பின் பாரதி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா பாரதி இரவு கோவமாக பேசியதற்கு என்ன காரணம் என தெரியாமல் இருக்க அப்போது பாரதிக்கு போன் செய்கிறார். அப்போது பாரதி மனசாட்சி படி நடந்து கொள்ளும் நான் தான் சரியாக இல்லை என நினைக்கிறன் என சொல்கிறார். பின் பாரதி நீங்க எல்லாரும் சேர்ந்து பிளான் செய்து தான எல்லாத்தையும் செய்வீர்கள் ஆனால் இப்போது தெரியாதது போல கேட்குறீர்கள் என சொல்ல, சௌந்தர்யா என்ன ஆச்சு என கேட்கிறார். அப்போது பாரதி உங்களது மருமகள் விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஹேமாவிடம் விவாகரத்து பற்றி சொல்லி இருக்கிறாள் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
சௌந்தர்யாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்க அப்போது சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு போன் செய்கிறார். ஹேமாவிடம் விவாகரத்து பற்றி யார் என சொன்னால் என கேட்க அப்போது லட்சுமி சொல்லி இருப்பாளோ என கேட்கிறார். அப்போது கண்ணம்மா லட்சுமி சொல்லவில்லை ஹேமா பாரதி பேசுவதை பார்த்ததாக லட்சுமி சொன்னார் என சொல்கிறார். பின் ஹேமா வந்து மீண்டும் அப்பா யாருக்கு விவாகரத்து கொடுக்க இருக்கிறார் என கேட்க அப்போது ஹேமா ஒரு அங்கிள் வந்தார் அவர் டாடியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பா யாருக்கு விவாகரத்து கொடுக்க போகிறார் என கேட்க சௌந்தர்யா அதற்கெல்லாம் பதில் இல்லை என சொல்கிறார். மறுபக்கம் சாரதி வெண்பா காரில் ஜாலியாக வந்து கொண்டிருக்க வெண்பா கடுப்பில் இருக்கிறார். அப்போது ரோட்டில் ஒருவர் அடிபட்டு இருக்கிறார். சாரதி அவரை பார்த்து காப்பாற்ற வேண்டும் என நினைக்க ஆனால் வெண்பா வேண்டாம் என சொல்கிறார். ஆனால் சாரதி அவரை காப்பாற்ற வேண்டும் என சொல்லி அவரை தூக்கிக் கொண்டு காரில் படுக்க வைக்கிறார்.
மதுரையில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
அப்போது பாரதி மருத்துவமனை தான் அருகில் இருக்க வெண்பா அங்கே போக கூடாது என நினைக்கிறார். ஆனால் சாரதி அங்கே தான் போக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். பின் அங்கே சென்று அடிபட்டவரை அட்மிட் செய்கிறார். அப்போது கண்ணம்மா வர யார் இவர் என கேட்கிறார். ரோட்டில் அடிபட்டு இருந்தார் என சொல்லி பதட்டப்படாமல் இருங்கள் என சொல்கிறார். அப்போது நானும் வெண்பூவும் தான் காப்பாற்ற வந்தோம் என சொல்ல வெண்பூ என்றால் அவளாக இருக்குமா என நினைக்கிறார். ஆனால் வெண்பா காரில் இருந்து கொண்டு வர மாட்டேன் என சொல்ல சாரதி கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார்.
பின் கண்ணம்மா முன்னால் வெண்பாவும் சாரதியும் வர கண்ணம்மா அதை பார்த்து சந்தோசப்படுகிறார். சாரதி இது என் மனைவி என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். கண்ணம்மாவிடம் நாங்க திருமணம் செய்ய போகிறோம் என சொல்ல நீங்க இப்போது செய்த உதவி உங்களது குழந்தைகள் வரை வந்து சேரும் என கண்ணம்மா சந்தோசப்படுகிறார். இவள் முன்னாள் நான் மாட்டிக் கொண்டோம் என வெண்பா நினைக்கிறார்.