மதுரையில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 10) மதுரை மாவட்ட துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி நிமித்தம் மின் நிறுத்தம் செய்ய போவதாக அந்தந்த பகுதிகளின் மின்வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை படும் என்ற விவரத்தை குறித்து விரிவாக பார்க்க முழுமையாக பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மின்தடை:
மதுரை மாவட்டத்தில் நாளை வெள்ளைக்கிழமை அன்று சமயநல்லூர், ஆனையூர் மற்றும் மதுரை பெருநகர் கோவில் துணை மின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள வட்டாரங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த பகுதிகள் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சமயநல்லூர் துணை மின் நிலையம் :
சரவணா நகர், பாலாஜி பவர் ஹவுஸ், மகாகணபதி நகர், அன்னை மீனாட்சி நகர், எஸ்.எஸ்.மகால், வித்ய வாகினி அபார்ட்மெண்ட், ஆகாஷ் கிளப் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்
ஆனையூர் துணை மின்நிலையம் :
சங்கீத்நகர், சஞ்சீவி நகர், ஆனையூர் மெயின் ரோட, செல்லையா நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை, குட்செட்தெரு, அன்புநகர், அசோக் நகர், அப்பாத்துரை நகர் 1-வது தெரு, மல்லிகை நகர், ஆபீசர் டவுன், சிலையனேரி, வைகை அப்பார்ட்மெண்ட், பிரசன்னா காலனி, கூடல்புதூர், கருப்பசாமி நகர், இந்திரா நகர், ஜானகி நகர் 2-வது தெரு உள்ளிட்ட இடங்களில் காலை மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கோவில் துணை மின்நிலையம் :
கீழமாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, தாசில்தார் பள்ளி வாசல் தெரு, தளவாய் தெரு, வெங்கலக்கடைத்தெரு, சாமி சன்னதி, கீழவடம்போக்கித்தெரு, கீழ பெருமாள் மேஸ்திரி வீதி, கொத்தவால் சாவடி, ஜடாமுனீஸ்வரர் கோவில் தெரு, ஆதிமூலம் பிள்ளை சந்து உள்ளிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் இருக்கும் என மதுரை பெருநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.