கண்ணம்மா பாரதியின் மனைவி என்ற உண்மையை ஜானகி அம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மா பாரதியின் மனைவி என்ற உண்மையை ஜானகி அம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா பாரதியின் மனைவி என்ற உண்மையை ஜானகி அம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா பாரதியின் மனைவி என்ற உண்மையை ஜானகி அம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி நல்ல பையன் அவனுடைய மனைவி மீது தான் தவறு இருக்கும் அவளை வர சொல் என சொல்ல சௌந்தர்யா கண்ணம்மா பற்றிய உண்மையை ஜானகி அம்மாவிடம் சொல்கிறார். பின் ஹேமா கண்ணம்மாவிடம் சில கோரிக்கைகளை வைக்க அதை பார்த்து அனைவரும் குழப்பமடைகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஜானகி அம்மா பாரதி இவ்வளவு நல்ல பையன் கண்டிப்பாக உன் மருமகள் மீது தான் தவறு இருக்கும் என சொல்ல, என் மருமகள் மிகவும் நல்லவள் அவளை எந்த விதத்திலும் குறை சொல்லிவிட முடியாது அவ்வளவு சகிப்புத்தன்மை உடையவள் என சொல்ல அப்போ பாரதி மீது தான் தவறு இருக்கிறதா என ஜானகி அம்மா கேட்கிறார். அவன் மீதும் தவறு இல்லை ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை என சௌந்தர்யா சொல்ல, உன் மருமகள் யார் என ஜானகி அம்மா கேட்கிறார்.

என் மருமகள் இந்த மருத்துவமனையில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள் என சொல்ல, அப்படியா என ஜானகி அம்மா கேட்கிறார். ஆமாம் அவளை நீங்க தினமும் பார்க்கிறீர்கள் என சொல்ல, அப்படியா என ஜானகி அம்மா கேட்கிறார். அப்போது அட்மின் ஆபிசர் கண்ணம்மா தான் என்னுடைய மருமகள் என சொல்லி நடந்த விவரத்தை சொல்கிறார். கண்ணம்மா எவ்வளவு பக்குவமான பொண்ணு அவளை பிரிந்து ஏன் பாரதி இருக்கிறான் என் ஜானகி அம்மா கேட்க, சௌந்தர்யா நடந்ததை சொல்கிறார். பின் இப்படி தான் இருவரும் இரு குழந்தைகளுடன் தனி தனியாக இருக்கிறார்கள் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஜானகி அம்மா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் சௌந்தர்யா அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகளை செய்து இருக்கிறோம் ஆனால் எதுவும் நடக்கவில்லை என சொல்ல, எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது தினமும் பார்த்துக் கொண்டு எப்படி பிரிந்து இருக்கிறார்கள் என கேட்கிறார். பின் ஜானகியின் மகன் வெளியே போக கிளம்பி வருகிறார். அப்போது ராமன் பாரதி கண்ணம்மா இருவரும் நல்லவர்கள் ஆனால் ஏன் இப்படி பிரிந்து இருக்கார்கள் என நினைக்கிறார்கள்.

மறுபக்கம் லட்சுமி மருத்துவமனைக்கு வர, ஜானகி அம்மா உடன் வெளியே போகிறோம் என கண்ணம்மா சொல்கிறார். ஹேமாவும் வருவதாக சொல்ல லட்சுமி சந்தோசப்படுகிறார். அப்போது ஹேமா வர அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் தாய் பாசத்துடன் வந்து என்னை தூக்குங்க சமையல் அம்மா என கேட்டு முத்தம் கொடுக்க சொல்கிறார். கண்ணம்மா முத்தம் கொடுக்க லட்சுமி என ஹேமா இப்படி நடந்து கொள்கிறாள் என நினைக்கிறாள். பின் எல்லாரும் வெளியே போக கிளம்புகிறார்கள். ஹேமா கண்ணம்மாவை பார்த்துக் கொண்டே செல்கிறாள். கண்ணம்மா அதை பார்த்து வருத்தப்படுகிறார்.

அப்போது சௌந்தர்யா வந்து என்ன ஆனது என கேட்க, ஹேமா பார்க்கும் பார்வையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நீங்க தான் என் அம்மாவா என கண்ணால் கேட்கிறாள் ஆமாம் என என்னால் சொல்ல முடியவில்லை. சாகலாம் போல இருக்கிறது என சொல்கிறாள். சௌந்தர்யா நீ பொறுமையாக இரு என சொல்கிறார். வேற என்ன செய்ய முடியும் என கண்ணம்மா கேட்கிறார். பின் ஜானகி அம்மா குடும்பத்துடன் வெளியே வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலையில் அறிவிப்பு!

ஜானகி அம்மா வேலை செய்த பள்ளிக்கு வருகின்றனர்.கண்ணம்மாவிடம் இவரை முதலில் இங்கே தான் சந்தித்தேன் என சொல்ல, உள்ளே சென்று பார்க்க வேண்டும் என சொல்ல வாட்ச்மேன் சரி என சொல்கிறார். ஜானகி அம்மா ஆசையுடன் உள்ளே சென்று பார்க்கிறார். இங்கே தான் பாடம் சொல்லி கொடுப்பேன் அந்த கிளாசில் இருந்து அவர் என்னை பார்ப்பார் என சொல்கிறார். பழைய இடங்களுக்கு சென்று எல்லாம் பார்க்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன் ஆனால் இப்போது தான் அது நடந்து இருக்கிறது என சொல்கிறார். பின் ராமன் ஐயா காதல் சொன்ன இடத்திற்கு வருகின்றனர். பின் இருவரும் வாழ்ந்த வீட்டிற்கு வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!