மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலையில் அறிவிப்பு!
தற்போது 7வது ஊதியக் குழுவின் படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி (DA) தொகை 6 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
கடந்த மார்ச் மாதத்தில் 34% அகவிலைப்படி (DA) உயர்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அடுத்த தவணைக்கான DA உயர்வை எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் இம்மாதத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்போது, சமீபத்தில் வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகளின்படி இந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், மே மாதத்திற்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) குறியீடு எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது மே மாதத்தில் AICPI எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு அகவிலைப்படியை கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான AICPI குறியீடு இன்னும் உயரும் பட்சத்தில் அகவிலைப்படி தொகை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கணிப்புகள் எழுந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தொகை இந்த முறை 6% வரை உயரக்கூடும் என்று தகவல்கள் கூறுகிறது.
தமிழகத்தில் இன்று (ஜூலை 14) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
இதன் மூலம் ஒட்டு மொத்த அகவிலைப்படி உயர்வு 40% வரை இருக்கும். இது குறித்த அறிவிப்பு ஜூலை மாதம் 31ம் தேதியன்று வெளியாகலாம் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் இப்போது மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிற்பாடு செப்டம்பர் 3ம் தேதி DA உயர்வு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அறிவிக்கப்பட்டால் 1 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.