திட்டமிட்டு பாரதியை சமாதானம் செய்த வெண்பா, மகளின் நிலைமையை நினைத்து கவலைப்படும் சண்முகம் – இன்றைய எபிசோட்!

0
திட்டமிட்டு பாரதியை சமாதானம் செய்த வெண்பா, மகளின் நிலைமையை நினைத்து கவலைப்படும் சண்முகம் - இன்றைய எபிசோட்!
திட்டமிட்டு பாரதியை சமாதானம் செய்த வெண்பா, மகளின் நிலைமையை நினைத்து கவலைப்படும் சண்முகம் - இன்றைய எபிசோட்!
திட்டமிட்டு பாரதியை சமாதானம் செய்த வெண்பா, மகளின் நிலைமையை நினைத்து கவலைப்படும் சண்முகம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா தற்கொலை செய்து கொள்வது போல நடித்து பாரதியை வர வைத்து சமாதானம் செய்கிறார். பின் கண்ணம்மாவின் நிலைமையை பார்த்து சண்முகம் வருத்தப்பட்டு அறிவுரை செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா தற்கொலை செய்ய போவதாக சொல்ல, பாரதி பதறி அடித்து வருகிறார். அப்போது சாந்தி அதை பார்த்து வெண்பாவிடம் சொல்ல, வேகமாக சென்று ரூமிற்குள் கதவை அடைத்துக் கொண்டு தூக்கு மாட்டிக் கொள்ள ஏற்பாடுகளை செய்கிறார். உள்ளே அமர்ந்து இருக்க பாரதி கதவை உடைத்துக் கொண்டு வந்து உள்ளே வர வெண்பா தூக்கு மாட்டிக் கொள்வது நடிக்கிறார். அப்போது பாரதி அவரை காப்பாற்றி ஏன் தூக்கு மாட்டிக் கொள்ள போனாய் என கேட்கிறார்.

உடனே உன்னால் தான் நீ திட்டியதால் தான் நான் செய்தேன் என சொல்கிறார். பின் வெண்பா நான் அஞ்சலி உயிர் ஆபத்து என தெரிந்தும் கூட அவளை காப்பாற்ற வேண்டும் என்பதால் தான் அவளுக்கு மாத்திரை கொடுத்தேன், அதை புரிந்து கொள்ளாமல் என்னை உன் குடும்பம் வழக்கம் போல வில்லி போல மாற்றிவிட்டது என சொல்கிறார். பின் எல்லாம் உனக்காக தான் செய்தேன் என சொல்ல பாரதி நம்பாமல் இருக்க, வெண்பா மீண்டும் சாக போகிறார். அப்போது பாரதி அவரை அடித்து தடுக்க வெண்பா இது தான் என்னுடைய பாரதி உனக்காக தான் எல்லாம் செய்தேன் யார் உன்னுடன் இல்லாமல் இருந்தாலும் நான் இருப்பேன் என சொல்ல பாரதி சமாதானம் ஆகிறார்.

கண்ணம்மாவின் அப்பா அவரது வீட்டிற்கு சென்று கண்ணம்மாவின் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார். கண்ணம்மா ஏன் வருத்தப்படுகிறீர்கள், இதெல்லாம் எப்போதும் நடப்பது தான 9 வருஷத்திற்கு முன்னாள் எப்படி இருந்தாரோ அப்படி தான் இன்னும் இருக்கிறார் அதில் வருத்தப்பட எதுவும் இல்லை என சொல்கிறார். பின் சண்முகம் இனிமேல் நீ தனியாக இருக்க வேண்டாம் என்னுடன் வந்துவிடு என சொல்ல லக்ஷ்மிக்கு என்ன சொல்வது என கேட்கிறார். அவளுக்கு உண்மையை சொல்லிவிடலாம் என சொல்ல, என்ன அப்பா சொல்கிறீர்கள் என கேட்க அவளுக்கு இத்தனை நாளாக யாரும் இல்லை என சொல்லிவிட்டேன் இனிமேல் வந்தால் அவள் மனதில் பல கேள்விகள் இருக்கும் அது வரை இப்படியே இருக்கட்டும் என கண்ணம்மா சொல்கிறார்.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜன.31க்கு பிறகு நீட்டிப்பு – முதல்வர் தீவிர ஆலோசனை!

இப்படி நிலைமையில் உன்னை அந்த டாக்டர் நிறுத்தி விட்டானே, ஆனால் இப்போது லக்ஷ்மியிடம் மறைத்துவிடலாம் ஆனால் அவள் பெரியவளாக மாறிய பின் தேவைப்படும், நீ லட்சுமி அப்பா பற்றி சொல்லவேண்டிய கடமை உனக்கு இருக்கிறது. நீ அவர் தான் அப்பா என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காது நீ தான் எதாவது செய்ய வேண்டும் அதனால் நல்ல முடிவை எடுத்து நீ செய் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!