அஞ்சலி சீமந்தத்திற்கு அழைக்க வரும் சண்முகம் மற்றும் பாக்கியா, வர சம்மதம் தெரிவித்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
அஞ்சலி சீமந்தத்திற்கு அழைக்க வரும் சண்முகம் மற்றும் பாக்கியா, வர சம்மதம் தெரிவித்த கண்ணம்மா - இன்றைய
அஞ்சலி சீமந்தத்திற்கு அழைக்க வரும் சண்முகம் மற்றும் பாக்கியா, வர சம்மதம் தெரிவித்த கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
அஞ்சலி சீமந்தத்திற்கு அழைக்க வரும் சண்முகம் மற்றும் பாக்கியா, வர சம்மதம் தெரிவித்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிற்கு ஆதரவாக தனது அம்மா அப்பா இருப்பதை பற்றி சொல்லி பாரதி வருத்தப்படுகிறார். பின்னர் லட்சுமி வீட்டிற்கு வந்து பல கேள்விகளை கேட்கிறார்.அஞ்சலிக்கு நாளைக்கு வளைகாப்பு உள்ளதால் சண்முகமும், பாக்கியாவும் கண்ணம்மாவை அழைக்க வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியிடம் சௌந்தர்யா பொய் சொன்னதை சொல்லி வருத்தப்படுகிறார். யாரை வேண்டாம் என்றும், எந்த குழந்தை எனக்கு பிறந்தது இல்லை என்று இருக்கின்றோனோ அதை என்னுடன் பழகவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்.நீங்க உண்மையாவே என்னை பெற்ற அம்மாவாக இருந்தால் இப்படி செய்வீர்களா. நீங்க முன்னாடி மாதிரி இல்லை ரொம்ப மாறிட்டீங்க என சொல்லி வருத்தப்படுகிறார்.

6,7, மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்., 6 முதல் பள்ளிகள் திறப்பு – கர்நாடகா அரசு உத்தரவு!

பின்னர் லட்சுமியை அழைத்துக் கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். என்ன லட்சுமி எப்படி இருக்க என கேட்க லட்சுமி கேள்வி கேட்க தொடங்குகிறார். என்னை ஏன் அங்கே கொண்டுபோய் விட்ட ஏன் உன்ன அம்மான்னு கூப்பிட கூடாது என பொய் சொன்ன நீ தான பொய் சொல்லக்கூடாது என சொல்லிகே கொடுத்த என கேட்கிறார். நான் ஸ்கூலில் சமையல் செய்கிறேன் என்று தெரிந்தால் உன்னை ஸ்கூலில் ஒரு மாதிரி பேசுவார்கள் என நினைத்து நான் சொன்ன பொய் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என கண்ணம்மா சொல்கிறார்.

எனக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கல,அங்க ஒரு தாத்தா வந்து அஞ்சலிக்கு நான் அப்பா அப்போ உனக்கு நான் தாத்தா என கூப்பிட சொல்கிறார். எல்லார்கிட்டயும் நல்லா பேசுற டாக்டர் அங்கிள் உங்களை பார்த்தல் மட்டும் கோவமாக பேசுகிறார். அவர் எத்தனை தடவை என்னிடம் உன் அப்பா எங்கே என கேட்டிருக்கார் தெரியுமா. உண்மையாவே என் அப்பா துபாய்ல தான் இருக்காரா. உண்மையா சொல்லு என கேட்க, கண்ணம்மா எல்லாம் என் தலையெழுத்து என அழுகிறார். உடனே லட்சுமி இனிமேல் இப்படி கேட்க மாட்டேன் அழாத என சொல்லி கண்ணீரை துடைத்துவிடுகிறாள்.

வனிதா விஜயகுமார் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

மறுநாள் கண்ணம்மா பாரதி பேசியதை நினைத்துக் கொண்டே காய்கறி வெட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சண்முகமும், பாக்கியாவும் வருகின்றனர். முதலில் இவ்வளோ வருடம் கழித்து பாக்கியா உள்ளே வர தயக்கம் தெரிவிக்கிறார். பின்னர் சண்முகம் உள்ளே அழைத்து செல்கிறார். பாக்கியா அப்பாவை பார்த்து சந்தோசப்படுகிறார். உள்ளே வாங்க என சொல்ல பின்னால் பாக்கியா இருக்கிறார். அவரையும் உள்ளே அழைக்க என்ன விசயம் என கண்ணம்மா கேட்கிறார்.

வீட்டில் விசேஷம் என பாக்கியா சொல்ல, அஞ்சலிக்கு சீமந்தம் என அவர் அப்பா சொல்கிறார். அதை கேட்டு கண்ணம்மா சந்தோசப்படுகிறார். பின்னர் அஞ்சலிக்காக சீட்டு போட்டு 1 லட்சம் வச்சுருக்கேன் அதை வைத்து தான் செலவு செய்ய போகிறேன். நீ உன் மாமியார் வீட்டில் செய்கிறார்கள் என நினைத்து வராமல் இருக்காதே என சொல்கின்றனர்.

ஆனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் வருவார்கள் என கண்ணம்மா தயக்கம் தெரிவிக்கிறார். உடனே பாக்கியா வீடு தேடி வந்து கூப்பிட்டால் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு இப்படி என்னை அசிங்கப்படுத்துகிறார். என கத்துகிறார். உடனே கண்ணம்மா அப்படியெல்லாம் இல்லை என சொல்லி வர சம்மதம் தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!