6,7, மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்., 6 முதல் பள்ளிகள் திறப்பு – கர்நாடகா அரசு உத்தரவு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள பகுதிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2 ம் அலையின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்டது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் மெல்ல மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அரசு ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகஸ்ட் 23 முதல் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தார்.
பாராலிம்பிக்ஸ்ல் தங்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசு – ஹரியானா அரசு அறிவிப்பு!
மாநிலத்தில், பள்ளிகள் திறப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு மேலும், 2 சதவீதத்திற்கும் குறைவான கோவிட் நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 9 மற்றும் 10 வகுப்புக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வகுப்புகள் நடக்கும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. இதன் விளைவுகளை பொறுத்து அடுத்த கட்டமாக மற்ற ளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செப்டம்பர் 6ம் தேதி முதல் மீண்டும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ள பகுதிகளில் மட்டும் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், வகுப்புகளில் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும். ஒரு வாரத்தில் ஐந்து நாள்களுக்கு மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று கூறியுள்ளார். கேரள எல்லைப்பகுதியுடன் உள்ள 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.