‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவுக்கு பிறந்த ஆண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் நடிகைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆண் குழந்தை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கக்கூடிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தமிழ் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் வெளியாகும் இந்த சீரியல் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு வார எபிசோடுகளிலும் சில புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த நடிகை ரோஷினி மற்றும் வில்லி பரினா இருவரும் சமீபத்தில் அந்த சீரியலை விட்டு விலகியுள்ளனர். அதாவது நடிகை ரோஷினி சினிமா பட வாய்ப்புகளுக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகி இருக்கும் நிலையில், நடிகை பரினா தனது பிரசவத்துக்காக சீரியலை விட்டு சில காலம் மட்டும் விலகி இருக்கிறார். அதனால் இந்த சீரியலில் வெண்பா கதாப்பாத்திரம் ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்படி கர்ப்பகாலத்திலும் இடைவிடாது சீரியலில் நடித்து வந்த நடிகை பரினா சமீபத்தில் ஒரு சிறிய பிரேக் எடுத்திருக்கிறார். அந்த வகையில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை பரினாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வலைதளங்கள் வாயிலாக நடிகை பரினாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.