பாரதி, கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் – புதிய ட்விஸ்ட்களுடன் சீரியல்!
ஏற்கனவே கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது மீண்டும் அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வர நீதிமன்றம் இருவரின் விவாகரத்து வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து விடுவார்களா அல்லது கண்ணம்மாவை பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு கண்ணம்மாவை பாரதி பிரிந்திருக்கிறார். ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுத்துவிட்டால் கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பது நிரூபணமாகி சீரியலே முடிவடைந்து விடும்.
நெஞ்சுவலியால் அவதிப்படும் மூர்த்தி, பதறிப்போன ஜீவா & மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!
ஆனால், அதை மட்டும் செய்யாமல் சீரியலை இழுத்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்பின்பு ஆறு மாதம் வரைக்கும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மட்டும் கண்ணம்மாவுடன் பாரதி ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பின்பு இருவரும் சண்டை போட்டு பழையபடி பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழத் துவங்கினர்.
Exams Daily Mobile App Download
இதற்கு இடையே வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அமெரிக்காவிலிருந்து வெண்பாவின் அம்மா ஷர்மிளா சென்னை வந்திருக்கிறார். வெண்பாவிற்கு அடுக்கடுக்காய் பல மாப்பிள்ளைகளை பார்த்தும் அனைவரையும் ஏதோ ஒரு குறை சொல்லிக்கொண்டு வெண்பா துரத்தி கொண்டே இருக்கிறார். மேலும் வெண்பாவிற்கு ஜோடியாக தற்போது ரோஹித் என்னும் கதாபாத்திரமும் சீரியலில் என்ட்ரியாகி உள்ளது. இந்நிலையில், மீண்டும் கண்ணம்மா மற்றும் பாரதியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இருவரும் விவாகரத்து வழக்கையும் விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.