விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சௌந்தர்யா வீட்டிற்கு சென்ற வடிவுக்கரசி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் சௌந்தர்யாவின் ஏற்பாடு படி பாரதி, கண்ணம்மா நெருக்கமாக இருக்க வாய்ப்புகள் கிடைக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் விறுவிறுப்புடன் நகைச்சுவை கலந்து கதை சென்று கொண்டிருக்கிறது. 9 வருடங்களுக்கு பின் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ, அவர்களை பிரிய விடாமல் பல திட்டங்களை செய்து சௌந்தர்யா பார்த்து கொள்கிறார். இன்றைய எபிசோடில் பாரதி, கண்ணம்மாவுடன் கோவப்பட்டு தனியாக சமைத்து சாப்பிட போறேன் என மாவு பாக்கெட் வாங்கி வருகிறார். பின் அவரே தோசை ஊற்றி சாப்பிட நன்றாக இருப்பதாக பெருமை அடிக்கிறார்.
உடல்நிலை மோசமான நிலையில் “சூரரைப் போற்று” நாயகி அபர்ணா பாலமுரளி? அவரே சொன்ன விளக்கம்!
பின் நான் அரைத்த மாவில் செய்தால் நன்றாக தான் இருக்கும் என கண்ணம்மா அவமானப்படுத்த, அப்போது வந்த வடிவுக்கரசி கண்ணம்மா பாரதியை ஒரே ரூமிற்குள் படுக்க வைக்க திட்டமிடுகிறார். இருவரும் படுக்க தூக்கத்தில் பாரதி கையை போடுகிறார். ஆனால் கண்ணம்மா வேண்டும் என்றே பாரதி மீது கையை போட, இருவருக்கும் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் இன்னும் பாரதி கண்ணம்மா தப்பு செய்திருப்பாள் என நம்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாரதி யாரிடமோ போன் செய்து பேசுகிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீரின் அம்மா கொலை செய்யப்பட்டாரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் உருக்கம்!
எல்லாருக்கும் கேட்கும்படி பேசுவதால் அவர் வெண்பாவிடம் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின் சௌந்தர்யா வீட்டிற்கு வடிவுக்கரசி செல்ல அங்கே லட்சுமி மற்றும் ஹேமா இருக்கின்றனர். அவர்களிடம் வடிவுக்கரசி பேசுகிறார். அடுத்து வெண்பா எப்போது வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் சீரியலில் பல திருப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளது.