விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீரின் அம்மா கொலை செய்யப்பட்டாரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் உருக்கம்!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த நடன இயக்குனர் அமீர். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சோக நிகழ்வுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிக்பாஸ் சீசன் 5:
தமிழ் சின்னத்திரையில் சர்வதேச நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. அதில் 18 போட்டியாளர்களும் வெவ்வேறு துறையில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின் மூன்று வைல்ட் கார்டு என்ட்ரியாக நடன இயக்குனர் அமீர், நடிகர் சஞ்சீவ், அபிஷேக் ஆகியோர் வந்தனர். பல நிகழ்ச்சிகளில் அமீர் நடன இயக்குனராக இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் அவர் பிரபலமானார்.
விமானத்தில் வந்த இதயம், சைத்ராவிற்கு ஷபானா செய்த தியாகம் – வெளியான இன்ஸ்டா பதிவு!
அவருடைய வாழ்க்கை வரலாற்றில் பல சாதனைகளை பற்றி சொன்னாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் பல துயரங்கள் எழுந்துள்ளது. அமீர் உடைய சொந்த ஊர் ஊட்டி ஆகும். அவருக்கு 1 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்து விட்டார். அதன் பின் அம்மாவின் அரவணைப்பில் இருந்த அவருடைய அம்மாவும் அவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது கொலை செய்யப்பட்டு இறந்து இருக்கிறார். அதன் பின் அவர் சிறிய ஆசிரமம் ஒன்றில் வளர்ந்து வந்தார்.
திருமணமான ஒரே மாதத்தில் ‘செம்பருத்தி’ ஷபானா & ஆர்யன் பிரிவு உண்மை தானா? அதிரடி பதில்!
தன்னுடைய நடன திறமையால் பல சாதனைகளை செய்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளராக இருக்கும் அமீர் இறுதிச்சுற்று வரை சென்று வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார ஓட்டிங் பட்டியலில் அமீர் தான் கடைசி இடத்தில் இருப்பதால் அவர் இன்னும் சுவாரசியம் அதிகமாக கொடுத்து விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.