அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் கண்ணம்மா, அடியாட்களுடன் சண்டையிடும் அகில் – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது மிகவும் பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் அடுத்த கட்ட காட்சிகள் குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்த்து வந்த அஞ்சலியின் பிரசவம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடரின் கதை திருப்பங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. புதிய கண்ணம்மாவை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் ரசிகர்களுக்கு மாற்றத்தை விட திருப்பமே முக்கியமாக இருக்க வேண்டும் என்ற வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது. பழைய கண்ணம்மாவின் நடிப்பை ரசிகர்கள் மிஸ் செய்து வருகிறார்கள் என்ற போதிலும், அதை மறக்கும் அளவிற்கு சீரியலின் திருப்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீதிமன்றத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா விவகாரத்து வழக்கு சென்று கொண்டிருக்கிறது.
‘கோபி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு’ – ரோஜா முதல் பாக்கியலட்சுமி வரை சீரியல்களின் கமெண்ட்ஸ்!
இதனால் சௌந்தர்யா, வேணு, அஞ்சலி மற்றும் கண்ணம்மாவின் அப்பா ஆகிய அனைவருமே மிகுந்த பதட்டத்தில் இருப்பது போல் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. சாதாரணமாக கோயிலுக்கு சென்ற அஞ்சலியை வெண்பா சொல்லியது போல் மாயாண்டி கடத்தி வைத்திருக்கிறான். அஞ்சலியை காணாமல் அனைவரும் தேட தொடங்குகின்றனர். எங்கு தேடியும் அஞ்சலியை காணாமல் போக, அகில் தவித்து விடுகிறார். ஒரு வழியாக அஞ்சலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் பிரசவத்தில் நடந்தது இது தான் – அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
அங்கு உள்ள ரவுடிகளிடம் அகில் சன்டையிட்டு வருவது போல் உள்ளது. அதை அங்கிருக்கும் மாயாண்டி ஒளிந்திருந்து பார்த்து வருகிறார். அஞ்சலிக்கு பிரசவ வலி வந்து விடுகிறது. வலியால் அஞ்சலி துடித்துக் கொண்டிருக்கும் போது, கண்ணம்மா அந்த இடத்திற்கு வருகிறார். பின்னர், அஞ்சலிக்கு பிரசவம் பார்க்க ஒரு பாட்டியும் உள்ளார். இப்படியான சூழ்நிலையில் அடுத்து வரும் காட்சிகள் குறித்து ரசிகர்களிடையே அதிக ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அஞ்சலிக்கு நல்லபடியாக பிரசவம் நடக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.