‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் பிரசவத்தில் நடந்தது இது தான் – அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் தனது பிரசவ நேரம் குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
நடிகை பரினா
சமீபத்தில் தனது பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ தொடரை விட்டு விலகிய நடிகை பரினாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட இவருக்கு சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. எப்போதும் போல பிரசவத்துக்கு பின்பாகவும் ஆக்டிவாக இருந்து வரும் பரினா, தனது குழந்தையின் வருகையை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் வந்த வேலையை ஆரம்பித்த அபிஷேக் – ப்ரியங்காவிற்கு குட்டு! ப்ரோமோ ரிலீஸ்!
இதனிடையே பரினாவின் உடல்நிலை குறித்து சில வந்தந்திகள் சொல்லப்பட்டு வந்த போதிலும், குழந்தை பிறப்புக்கு பின்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக தொடர்வேன் என்று அறிவித்திருக்கிறார் நடிகை பரினா. இப்போது முழுமையான தாய்மையை அனுபவித்து கொண்டிருக்கும் இவர், தனது பிரசவ நேரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில், ‘என் பிரசவ கதை. நான் ஏற்கனவே சொன்னது போல பிரசவம் என்பது ஒரு அழகான அனுபவம்.
இந்த பிரசவத்திற்கு முன்பாக பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில் எனது குழந்தையை பெற்றெடுத்தேன். எனக்கு இந்த பிரசவம் 6 மணிநேரம் நடைபெற்றது. அதுவும் 4 முயற்சிக்கு பின்னரே குழந்தை பிறந்தது. கர்ப்ப காலம் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்தது, பிரசவத்தின் கடைசி வாரம் வரை வேலை செய்தது, உடற்பயிற்சிகள், யோகா என அனைத்தும் பிரசவத்துக்கு கை கொடுத்தது. இது என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வேலையை விடுவது, உங்களை மன ரீதியாக இழப்பது என்பதல்ல. கர்ப்பம் என்பது வாழ்க்கையின் ஒரு கட்டம். அதில் நீங்களாகவே எப்போதும் இருங்கள். தைரியத்துடன் அதை எதிர்கொள்ளுங்கள். அதற்கான வலிமை நமக்கு உண்டு’ என்று மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவருக்கு இப்பதிவின் மூலம் நன்றி கூறி இருக்கிறார் நடிகை பரினா.
பிரபல யூட்யூபர் டாடி ஆறுமுகத்தின் மகனை கைது செய்த போலீசார் – புதுச்சேரியில் நடந்தது என்ன?
அதே போல கர்ப்பத்தின் கடைசி தருணம் வரை தன்னை வெண்பாவாக வைத்திருந்ததற்கும், எல்லாவிதமான கருத்துக்களை உடைத்ததற்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். பிறகு தனது மகன் ருபைத்துக்கு, வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் ஆதரவு தருவதாகவும், இப்போது போல எப்போதும் உன்னை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்றும் தாய்மையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.