பிரபல யூட்யூபர் டாடி ஆறுமுகத்தின் மகனை கைது செய்த போலீசார் – புதுச்சேரியில் நடந்தது என்ன?

0
பிரபல யூட்யூபர் டாடி ஆறுமுகத்தின் மகனை கைது செய்த போலீசார் - புதுச்சேரியில் நடந்தது என்ன?
பிரபல யூட்யூபர் டாடி ஆறுமுகத்தின் மகனை கைது செய்த போலீசார் - புதுச்சேரியில் நடந்தது என்ன?
பிரபல யூட்யூபர் டாடி ஆறுமுகத்தின் மகனை கைது செய்த போலீசார் – புதுச்சேரியில் நடந்தது என்ன?

புதுச்சேரியில் உள்ள மதுபானக்கடையில் குடித்துவிட்டு தகராறு செய்த பிரபல யூட்யூபர் டாடி ஆறுமுகம் அவர்களின் மகன் கோபிநாத் தனது நன்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாய் இருந்து வந்த கோபிநாத்தை போலீசார் மடக்கி பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது நடவடிக்கை

உலகளவில் பிரபலமாக இருக்கக்கூடிய வில்லேஜ் ஃபுட் பேக்டரி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம். இந்த யூடியூப் சேனலில் மட்டும் இவரை சுமார் 4.62 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த அளவுக்கு பிரபலமான டாடி ஆறுமுகத்தின் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அவரது மகன் கோபிநாத். இப்போது டாடி ஆறுமுகத்தின் சேனலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து மதுரை மற்றும் புதுச்சேரியில் ஹோட்டல்களை துவங்கி அவற்றை நடத்தி வருகிறார் இவர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் யார் தெரியுமா? A டூ Z தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது 32 வயதான கோபிநாத் புதுச்சேரியில் உள்ள தந்தையின் ஹோட்டல்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள AK டார்வின் உணவத்திற்கு நேற்று (நவ.22) இரவு 8.30 மணியளவில் கோபிநாத், ஜெயராம் மற்றும் தாமு ஆகிய தனது 2 நண்பர்களுடன் சென்றுள்ளார். இந்த ஹோட்டலில் உள்ள PUB ஒன்றில் அவர்கள் மூவரும் நெடு நேரமாக மது அருந்தி இருக்கிறார்கள்.

இதனால் குடிபோதை தலைக்கு ஏற கோபிநாத், ஜெயராம், தாமு ஆகிய மூவரும், ஹோட்டல் ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இரவு 11 மணியானதும், மதுக்கடைகளை மூடுவதற்காக முயற்சித்த ஹோட்டல் ஊழியர்களிடம் அவர்கள் மீண்டுமாக மது கேட்டுள்ளனர். ஆனால் 11 மணியானதால் மது கொடுக்கமுடியாது என அந்த ஊழியர்கள் சொன்னதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத் ஊழியரை மிரட்டி விட்டு பீர் பாட்டிலை உடைத்து ரகளை செய்துள்ளார்.

சமந்தாவை தொடர்ந்து காதல் கணவரை பிரியும் பிரபல நடிகை? இன்ஸ்டாவில் பெயர் நீக்கம்! ரசிகர்கள் ஷாக்!

மேலும் அந்த ஹோட்டலில் உள்ள பொருட்களையும் அவர்கள் சூறையாடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த போது, முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கோபிநாத், காவல் நிலையத்துக்கு வராமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதை தொடர்ந்து அந்த தனியார் ஹோட்டல் ஊழியர் ஜார்ஜஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத்தை தேடி வந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!