‘பிக் பாஸ்’ வீட்டில் வந்த வேலையை ஆரம்பித்த அபிஷேக் – ப்ரியங்காவிற்கு குட்டு! ப்ரோமோ ரிலீஸ்!
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 50வது நாளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் கனா காணும் காலங்கள் என்ற புதிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
விஜய் டிவியில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு சீசன் 5 என கடந்த மாதம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஏழு வாரங்கள் முடிந்து எட்டாவது வாரம் தொடங்கி உள்ளது. எட்டாவது வார தலைவராக அபிநய் இருக்கிறார். மேலும் பிரியங்கா, தாமரை, பாவ்னி, ராஜு, நிரூப், அண்ணாச்சி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அபிஷேக் ராஜா வீட்டில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தார்.
பிரபல யூட்யூபர் டாடி ஆறுமுகத்தின் மகனை கைது செய்த போலீசார் – புதுச்சேரியில் நடந்தது என்ன?
இன்றைய எபிசோட் முதல் ப்ரோமோவில் புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஒருவர் இருக்கிறார். அவர் நடன இயக்குனர் அமீர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கனா காணும் காலங்கள் என்ற புதிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் போல இருக்க வேண்டும். மேலும் அபிஷேக், ராஜு, சிபி ஆகியோர் டீச்சர் போல இருக்க வேண்டும். தற்போது வெளியான ப்ரோமோவில் பிரியங்காவிடம் அபிஷேக் தாமரை சொல்வது போல நீங்க நடப்பது சரியில்லை என சொல்கிறார்.
சமந்தாவை தொடர்ந்து காதல் கணவரை பிரியும் பிரபல நடிகை? இன்ஸ்டாவில் பெயர் நீக்கம்! ரசிகர்கள் ஷாக்!
அதற்கு தாமரை, மற்றவர்களிடம் நீங்க காட்டும் அன்பு தவறானது, சில பேரிடம் மட்டுமே நீங்க உண்மையாக இருப்பதாக சொல்கிறார். உங்களை விலைக்கு வாங்கலாம், ஜால்ரா என அடுத்தடுத்து வார்த்தைகளை விடுகிறார். இந்த வாரம் நீங்க அப்படி இல்லை என தெரியப்படுத்துங்கள், கேவலமாக இருக்கிறது இதை எல்லாம் கேட்க என கூறுகிறார். உடனே பிரியங்கா நான் யாரிடமும் நிரூபிக்க வேண்டி இங்கே வரவில்லை என சொல்ல இன்றைய எபிசோட் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.