மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு தாயான கண்ணம்மா, மகிழ்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவும் பாரதியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நெருக்கமாக பழகி வரும் நிலையில் அடுத்து வரும் ட்விஸ்ட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ தொடங்கி 4 நாட்கள் ஆன நிலையில், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசம் வெளியாகி வருகிறது. அது போதாது என அவர்களை மீண்டும் நெருக்கமாக பழக வைக்க சௌந்தர்யா வக்கீல் என சொல்லி வடிவுக்கரசியை ஏற்பாடு செய்துள்ளார். அவர் திட்டத்தின் படி இன்று பாரதி கண்ணம்மா சேர்ந்து ஒரே ரூமில் படுத்து உறங்குகின்றனர்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய்? ரசிகர்கள் ஷாக்!
அப்போது பாரதி தெரியாமல் கண்ணம்மா மீது கை போட கண்ணம்மாவிற்கு பழைய நியாபகங்கள் வருகிறது. பின் வேண்டும் என்றே கண்ணம்மா பாரதி மீது கை போட தூக்கத்தில் எழுந்த பாரதி பதட்டம் அடைகிறார். அடுத்ததாக நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் சாந்தி வக்கீலிற்கு பணம் கொடுத்து வெண்பாவை வெளியே எடுக்கிறார். அவருக்கு பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்வது தெரிந்து என்ன மாதிரி சம்பவம் நடக்கும் என பார்க்கலாம்.
சன் டிவி “வானத்தை போலே” சீரியலில் துளசியாக களமிறங்கிய புதிய நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!
பின் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதனால் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பாரா, அவருக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறக்குமா என்பது போல வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்க போவது இல்லை. மேலும் அஞ்சலியை கடத்தியது மாயாண்டி தான் என்ற உண்மை அகிலிற்கு தெரிய வரும். அதனால் சீரியலில் பல திருப்பங்கள் அடுத்து வர எபிசோடுகளில் வர இருக்கிறது.