பாரதி, கண்ணம்மா பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ப்ரோமோ ரிலீஸ்!

0
பாரதி, கண்ணம்மா பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி, கண்ணம்மா பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி, கண்ணம்மா பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ப்ரோமோ ரிலீஸ்!

பாரதி கண்ணம்மா தொடர் தற்போது புதிய கோணத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு சீரியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த வாரத்தில் இனி வரும் நாட்களுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடர் பல தரப்பிலான ரசிகர்களையும் திருப்திபடுத்தி வருவதால் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. ரசிகர்களின் மனப்போக்கை அறிந்த படியே இயக்குனரும் கதையை நகர்த்தி வருவதால் நம்பர் 1 இடத்தில் ‘பாரதி கண்ணம்மா’ நிலைத்து நிற்கிறது. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் நீதிமன்ற உத்தரவு படி ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். பாரதி கண்ணம்மாவை எப்படியும் வெறுக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும், கண்ணம்மா , பாரதியை எப்படியும் குழந்தைகளுடன் சேர்த்து விட வேண்டும் என்றும் துடித்து வருகின்றனர்.

சரவணன் கடையில் அர்ச்சனா செய்த மோசடி, குடும்பத்தை வரவைக்க டிக்கெட் அனுப்பிய சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இந்த நிலையில், லட்சுமியையும் தன்னோடு அழைத்து சென்று ஹேமாவோடு பார்த்துக் கொள்வதாக சௌந்தர்யா கூறியுள்ளார். இதனால் ஹேமாவும், லக்ஷ்மியும் ஒன்றாக பள்ளிக்கு சௌந்தர்யா வீட்டில் இருந்து வருகின்றனர். கண்ணம்மா வீட்டில் இருக்கும் பாரதி கண்ணம்மா சமைத்து தரும் உணவை சாப்பிடாமல் வெளியில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். ஒரே வீட்டில் இருந்தாலும், சண்டை மட்டும் ஓயவேயில்லை. ஹேமா மற்றும் லக்ஷ்மிக்கு பள்ளியில் உணவு கொடுப்பதற்கு கண்ணம்மா வீட்டில் இருந்து கிளம்புகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகர் அருண் பிரசாத்? புகைப்படத்தால் உருவான குழப்பம்!

அப்போது, பாரதியும் பள்ளிக்கு செல்ல கிளம்புகிறார். இதை அறிந்த ஆட்டோ குமார், பாரதி காரில் செல்ல முடியாத படி செய்து விடுகிறார். இதனால் பாரதி ஆட்டோவில் கிளம்ப கண்ணம்மாவும் இடத்திற்கு வந்து சேருகிறார். இதனால் வேறு வழியில்லாமல் கண்ணம்மாவும், பாரதியும் ஒன்றாக பள்ளிக்கு செல்கின்றனர். அப்போது ஆட்டோ குமார் பாரதியை வம்பிழுக்கும் விதமாக வேண்டும் என்றே ஆட்டோவை பள்ளம், குழியில் ஓட்டுகிறார். இதனால் பாரதி கோவப்படுகிறார். பின்னர், பள்ளிக்கு வந்ததும் குழந்தைகள் இருவரும் நீங்க ரெண்டு பெரும் ஏன் ஒரே ஆட்டோவில் வர்றீங்க என்று கேட்க இருவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைவது போல் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!