சரவணன் கடையில் அர்ச்சனா செய்த மோசடி, குடும்பத்தை வரவைக்க டிக்கெட் அனுப்பிய சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், அர்ச்சனா கடையில் சேலை வாங்கினால் சரவணன் கடையில் ஸ்வீட் இலவசம் என அர்ச்சனா திட்டமிட செந்தில் அர்ச்சனாவை சத்தம் போடுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், செந்தில் கடையில் கூட்டம் அதிகமாக வர இன்று முகுர்த்த நாள் கூட இல்லை இப்படி கூட்டம் வருகிறது என செந்தில் சந்தோசமாக இருக்கிறார். பின் கடையை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சரவணன் ஸ்வீட் கடைக்கு செல்கிறார். அங்கே கூட்டம் இருப்பதை பார்த்து செந்தில் சந்தோசப்பட ஒருவர் ஸ்வீட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் போவதை பார்க்கிறார். அவரை பார்த்து செந்தில் கோவப்பட, அர்ச்சனா வந்து நம்ம கடையில் துணி வாங்கினால் இங்கே ஸ்வீட் இலவசம் என சொல்லிருக்கேன என சொல்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக அகவிலைப்படி (DA) உயர்வு? புதிய தகவல்!
அப்போது அர்ச்சனா எல்லாம் நல்லதுக்கு தான் செய்திருக்கேன் என சொல்கிறார். இப்படி செய்தால் ரெண்டு பேர் கடையிலும் கூட்டம் எப்படி இருக்கிறது என சொல்கிறார். பின் செந்தில் நீ சொல்வதும் சரி தான் என சொல்ல, செந்தில் அர்ச்சனாவை கொஞ்சுகிறார். விக்கி பார்வதியை திட்டமிட்டு பழி வாங்க நினைக்கிறார். அவர் பாஸ்கர் மற்றும் பார்வதியை தனியாக சந்திக்க வைத்து அடி ஆளுங்களை வைத்து அடித்து பின் பார்வதியை பாஸ்கர் கல்யாணம் செய்ய முடியாமல் செய்ய போகிறேன் என சொல்கிறார்.
சரவணன் குடும்பத்தை நினைத்து கவலையாக இருக்க சந்தியா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என கேட்கிறார். இவ்வளவு பெரிய ஹோட்டல் இடம் எல்லாம் இருக்கிறது ஆனால் என் குடும்பத்தில் இருப்பவர்கள் இதை எல்லாம் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் என சொல்கிறார். அப்போது சந்தியா எல்லாரும் வந்த பின் நீங்க எவ்வளவு சந்தோசப்பட போறீங்க என்பதை நான் பார்க்க தான் போகிறேன் என நினைக்கிறார். பார்வதி பாஸ்கர் உடன் எப்படி போகலாம் என யோசித்து கொண்டிருக்க சந்தியா போனை எடுக்கிறார்.
தமிழக அரசு அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!
எப்படி இருக்கீங்க என கேட்டுவிட்டு ஆதிக்கு டிக்கெட் அனுப்பி இருக்கேன் நீங்க எல்லாரும் ரயிலில் வந்துவிடுங்கள் என சொல்ல அத்தையை கண்டிப்பாக வர சொல்லுங்க என சொல்கிறார். எல்லாரும் வந்துறேன் என சந்தோசமாக இருக்க, சிவகாமி வந்து என்ன எல்லாரும் சிரித்துக் கொண்டிருக்கீங்க என கேட்கிறார். அப்போது சந்தியா போன் செய்ததை சுந்தரம் சொல்கிறார். என்ன சொன்னா என சிவகாமி கேட்க, எல்லாரையும் கிளம்பி வர சொன்னால் என சொல்கிறார். நான் வரவில்லை என சிவகாமி சொல்கிறார். ஏன் என கேட்க பாலபிஷேகம் செய்ய நாளை ஒரு நாள் தான் இருக்கிறது என சிவகாமி சொல்கிறார். மயில் பார்த்துக் கொள்வார் என் சொல்கிறார். அர்ச்சனா நீங்க வராமல் இருந்தால் என்ன நாங்க போகிறோம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.