பாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளிய பாக்கியலட்சுமி – ரசிகர்கள் ஆர்வம்!
தமிழக இல்லத்தரசிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியாவின் மீது ரசிகர்கள் கோபத்தை தெளித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மக்களிடத்தில் ஜெட் வேகத்தில் சூடுபிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளது.
மீண்டும் பிரபலமாகும் பாக்கியா:
ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் எந்த சீரியல் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது என்று டிஆர்பி ரேட்டிங்கில் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும். அதன் படி ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தை பெற்று வந்ததை அடுத்து தற்போது பாக்கியலட்சுமி சீரியல் அதை முறியடித்துள்ளது.
சர்ச்சையை கிளப்பிய பிரபல சீரியலின் திருமண காட்சிகள் – இயக்குனர் சொன்ன விளக்கம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பத்தில் அனைத்து வீட்டு இல்லத்தரசிகளால் வரவேற்கப்பட்டது போலவே மீண்டும் தொடரில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அடுத்து நடக்கப்போவது என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு சீரியல் சூடுபிடித்துள்ளது. கோபி ராதிகாவுடன் இணைவாரா? பாக்கியாவிடம் சிக்குவாரா? என்ற பல கேள்விகளுடன் தொடர் நகர்கிறது.
இவ்வாறு சில நாட்களாக கோபியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பாக்கியாவிற்கு தற்போது சில விஷயங்கள் அவர் மனதை புரட்டும் அளவிற்கு யோசிக்க வைக்கிறது. அதாவது தினமும் கோபி வீட்டுக்கு வராமல் இருப்பது, ராதிகா வீட்டின் வெளியே நின்ற காரை குறித்து கூறியது. மேலும், அவர் பாக்கியாவிடம் வெறுப்பை காட்டுவது போன்ற சில நடவடிக்கைகள் அவரை குழப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ஒன்றில் செழியன், ஜெனி குறித்த காட்சிகள் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால இன்றைய எபிசோட் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.