“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரோஷினி மீண்டும் ரீஎன்ட்ரி? பரீனா வெளியிட்ட புகைப்படம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோஷினி உடன் கடைசியாக எடுத்த புகைப்படத்தை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தொடக்கம் முதல் 600 எபிசோடுகள் வரை கதாநாயகியாக கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். கர்ப்பமாக இருந்த கண்ணம்மா பாரதியிடம் கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது எல்லாம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது. அந்த அளவிற்கு இந்த சீரியலை புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல காரணமாக ரோஷினி இருந்தார். தற்போது வரை இந்த சீரியல் டாப்பில் உள்ள நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
அவருக்கு சீரியலில் நடிப்பதால் பட வாய்ப்புகள் வருவதில்லை என்பதால் சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது. சீரியலில் இருந்து விலகிய பின் அவர் சாயலில் இருக்கும் வினுஷா தேவி தற்போது கண்ணம்மாவாக களமிறங்கி கலக்கி வருகிறார். அடுத்ததாக சீரியலில் இருந்து விலகி தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 என்ற சமையல் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை காட்ட இருக்கிறார்.
தனது கணவரை நேரலையில் அடித்த “பிக் பாஸ்” தாமரை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
அதனால் ரோஷினி ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அதில் கண்ணம்மா ரோஷினி உடன் எடுத்த கடைசி புகைப்படம் என ரசிகர்கள் கேட்டதற்கு அதை ஷேர் செய்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ரோஷினி கண்ணம்மாவை மிஸ் செய்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.