‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பழைய கண்ணம்மாவை காணாமல் தவிக்கும் ரசிகைகள் – மீண்டும் வருவாரா?
பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக தமிழக மக்களின் மனதில் கண்ணம்மாவாக பதிந்து விட்டவர் நடிகை ரோஷினி. இவர் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணம்மா ரசிகைகள்:
பாரதி கண்ணம்மா தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கியது. பொதுவாக நல்ல நிறமுடைய பெண்கள் மட்டுமே திரையில் தோன்றி கதாநாயகியாக நடிக்க முடியும் என்ற பிம்பத்தை மாற்றி, கருமையான நிறத்தை உடைய பெண் நாயகியாக இருக்கிறார் என்ற ஆச்சர்யத்தில் இந்த சீரியலை பார்க்க தொடங்கியவர்கள் பலர் உள்ளனர். தாயற்ற பெண்ணாக இருக்கும் கண்ணம்மாவை சித்தி மற்றும் அவரது மக்களும் சேர்ந்து பல இம்சைகளை செய்து ஒவ்வொரு நாளையும் நிம்மதியற்ற நாளாக மாற்றி விடுவார்கள். அப்பாவின் ஆதரவும், அன்பும் மட்டுமே கண்ணம்மாவை வாழ வைத்து வந்தது.
‘பாக்கியலட்சுமி’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை – ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
கண்ணம்மா நிறத்தை வைத்து பலரும் அவரை ஒதுக்கி விடுவார்கள். அதன் பிறகு, அவரின் குணத்தால் கவரப்பட்டு காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பாரதி வீட்டில் மாமியார் பிரச்சனைகளை சந்திக்கிறார். இவ்வளவு துயரங்களையும் தாங்கி கொள்ளும் கண்ணம்மா, தனது ஒழுக்கத்தை பற்றிய கணவரின் குற்றச்சாட்டை சிறிதும் ஏற்காமல், தன்மானத்தோடு கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். பெரிய அளவில் படிக்கவில்லை என்றாலும், தனக்கு தெரிந்த சின்னச்சின்ன வேலைகளை செய்து தனது குழந்தையையும், சிறப்பாக வளர்க்கிறார்.
இவ்வாறு குடும்ப பிரச்சனைகளை சந்தித்து வரும் பெண்களுக்கு கண்ணம்மா கதாபாத்திரம் மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. இது போன்ற குடும்ப பிரச்சனைகளில் சிக்கி தங்களின் தன்னம்பிக்கையை இழக்காமல் போராட வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன்னோடியாக கண்ணம்மா இருக்கிறாள். இந்த கண்ணம்மாவை வெறும் சீரியல் கதாபாத்திரம் என்பதை தாண்டியும் மக்கள் தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பார்க்க தொடங்கி விட்டனர். அதுவே அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவும் உள்ளது.
ஆனால் கண்ணம்மாவின் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து இந்த கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த ரோஷினி விலகி உள்ளார். ரோஷினி தனது நிஜமான இயல்பையும், அலங்காரங்களையும் மாற்றி ஒரு தனித்துவமான முறையில் கண்ணம்மாவாக வாழ்ந்து வந்திருந்தார். இவ்வளவு திறமையான நடிகையை வெள்ளித்திரையில் இயக்குனர்கள் விட்டு வைப்பார்களா, அதனால் ஆதனால் தான் ரோஷினி வெள்ளித்திரைக்கு செல்வதற்காக கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து விலகியுள்ளார்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபியின் நிஜ மனைவி யார் தெரியுமா? வெளியான புகைப்படம்!
தற்போது புதிய கண்ணம்மாவாக வினுஷா என்ற பெண், ரோஷினியை போன்ற அதே உருவ அமைப்புடன் பாரதி கண்ணம்மா தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த புதிய கண்ணம்மாவின் மாற்றத்தினால் ரசிகைகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி, ரோஷினியை கண்ணம்மாவாக பார்க்க முடியாது என்பது தான் அவர்களின் சோகமாக உள்ளது. ரசிகர்களின் இந்த ஏக்கத்தினை புதிய கண்ணம்மா தனது நடிப்பினால் மாற்றுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
Saw the kannamma episode today. The new actress looks a faded version of the previous actress. Even her anger is not convincing. Hope her acting skills would improve. Maybe she is trying to act as the previous actress did but is unable to copy. She should try to act the character as she would interpret it. Maybe that might work.