‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியை பார்ட்டி கொடுத்து அனுப்பி வைத்த சீரியல் குழு – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியின் முக்கிய சீரியலாக உள்ள நிலையில் கதையின் நாயகி கண்ணம்மா தொடரை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கண்ணம்மா ‘ரோஷினி’:
விஜய் டிவியின் சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி இடம் உள்ளது. ஒரே போன்ற கதையாக இல்லாமல் பல்வேறு கதைக்களங்களை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாவது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும். அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பம் முதலே ரசிகர்களை கவர தொடங்கியது. கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டதுடன், அவர்களின் நேர்த்தியான நடிப்பும் மக்கள் மனதில் தனி இடத்தை தந்துள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை வைஷாலிக்கு கோலாகலமாக நடந்தேறிய திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
அந்த வகையில், கண்ணம்மா வேடத்தில் நடிக்கும் ரோஷினிக்கு தமிழ் சீரியலில் ‘பாரதி கண்ணம்மா’ தொடர் தான் முதல் முயற்சி. தற்போது மிகவும் விறுவிறுப்பாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் முடிய இருப்பதாகவும், சீசன் 2 வர இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து ரோஷினி வெளியேற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கண்ணம்மாவாக ஜீ தமிழ் நடிகை? ரசிகர்கள் அதிர்ச்சி!
ரோஷினிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வருவதாகவும், அதற்காக தொடரில் இருந்து விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷினி நடிக்கும் காட்சிகள் அக்டோபர் 23ம் தேதியுடன் முடிவடைந்துள்ளதாகவும், இதற்காக சீரியல் குழுவினர் சின்ன பார்ட்டி கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த ‘பாரதி கண்ணாம்மா’ சீரியல் ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். ரோஷினி தான் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்றும் தெரிவித்து உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.