பாரதியை ‘மச்சான்’ என கூறி வெறுப்பேற்றும் ஆட்டோ ட்ரைவர் – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோடு!

0
பாரதியை 'மச்சான்' என கூறி வெறுப்பேற்றும் ஆட்டோ ட்ரைவர் - 'பாரதி கண்ணம்மா' இன்றைய எபிசோடு!
பாரதியை 'மச்சான்' என கூறி வெறுப்பேற்றும் ஆட்டோ ட்ரைவர் - 'பாரதி கண்ணம்மா' இன்றைய எபிசோடு!
பாரதியை ‘மச்சான்’ என கூறி வெறுப்பேற்றும் ஆட்டோ ட்ரைவர் – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க திட்டமிட்டும் ஆட்டோ ட்ரைவர் குமார், பாரதியை மச்சான் என அழைத்து அவரை வெறுப்பேற்றுவது போல இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

தற்போது பல ஸ்வாரசியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் பாரதியையும் கண்ணம்மாவையும் வைத்து நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மாத காலத்திற்கு கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்யும் பாரதி, பெட்டி படுக்கையுடன் கண்ணம்மா வீட்டில் வந்து தங்கி இருக்கிறார். அதற்கு ஏற்றவாறு சௌந்தர்யாவும், லட்சுமியை தன்னுடன் சில காலம் இருக்கும் படிக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் உற்சாகம்!

இப்போது கண்ணம்மா வீட்டில் இருக்கும் பாரதி தனது சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டதாக சொல்லி புலம்பி கொண்டிருக்க கண்ணம்மாவும் அடிக்கடி பாரதியை வெறுப்பேற்றுவது போ ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ரசிகர்களுக்கு ஸ்வாசியத்தை கொடுத்து வருகிறது. இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய எபிசோடு ஒன்றில், கண்ணம்மாவின் ஆட்டோ ட்ரைவர் குமாரும் சேர்ந்து பாரதியை கடுப்பாக்குவது போல சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

அதாவது, கண்ணம்மாவை பார்க்க அவரது வீட்டுக்கு வரும் குமாரிடம், என்னாச்சு அண்ணா இவ்வளவு லேட் என கண்ணம்மா கேட்க, நம்ம வீட்டுக்கு டைனிங் டேபிள் வாங்குவதற்காக பர்னிச்சர் கடை வரைக்கும் போனேன். இவ்வளவு நாள் நீயும், பாப்பாவும் தனியாக இருந்தீர்கள், இப்போது மச்சான் வந்திருக்கிறார் அவருக்கு டைனிங் டேபிள் வேணும் என குமார் பதில் சொல்ல இனிமேல் என்னை மச்சான், கிச்சான் என்று சொன்ன உன்ன கொலை பண்ணி விடுவேன் என பாரதி கோபித்து கொள்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ பிரவீன், ராஜா ராணி நடிகையுடன் காதல் திருமணம் இங்கே தான் ஆரம்பித்தது – ஸ்வாரசிய தகவல்!

சரி இன்றைக்கு என்ன சாப்பாடு, எல்லாம் தடல் புடலா இருக்கும் போலயே என குமார் கேட்க, ஆப்பமும் தேங்காய் பாலும் என கண்ணம்மா பதில் சொல்கிறார். அப்படியா, லட்சுமி அப்பாவுக்கு இது ரொம்ப பிடிக்கும் என்று சொல்வியே என குமார் கூற, பாரதி அவரை முறைக்கிறார். பிறகு, நீங்கள் இன்றைக்கு சரியாக இல்லை என கூறி கண்ணம்மா அவரை விரட்டி விடுவது போல சில காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி தற்போது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!