‘பாரதி கண்ணம்மா’ பிரவீன், ராஜா ராணி நடிகையுடன் காதல் திருமணம் இங்கே தான் ஆரம்பித்தது – ஸ்வாரசிய தகவல்!
தற்போது காதல் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லன் நடிகர் பிரவீனுக்கு காதல் மலர்ந்த தருணம் குறித்த சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
நடிகர் பிரவீன்
சமீப காலமாக சின்னத்திரையின் ரீல் பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாக மாறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதத்தில் மட்டும் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல முன்னணி டிவி சேனல்களின் ரீல் ஜோடிகள் பலரும் ரியல் ஜோடிகளாக மாறி ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது விஜய் டிவியின் வில்லன் நடிகர் பிரவீன் மற்றும் நடிகை ஐஸ்வர்யாவின் காதல் திருமணமும் இணைந்துள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டின் இந்த வார எவிக்சன் அபிஷேக் தான் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் பிரவீன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா காதல் ஜோடியின் சந்திப்பு விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ சீரியலில் இருந்து தான் துவங்கி இருக்கிறதாம். அதாவது விஜய் டிவியில் கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்த நடிகர் பிரவீனுக்கும், அந்த சீரியலில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யாவுக்கும் இடையே அறிமுகம் கிடைத்திருக்கிறது.
எழிலை ஒதுக்கும் அமிர்தா, கோபி அலுவலகத்தில் உதவி செய்வதாக சொன்ன ராதிகா – இன்றைய எபிசோட்!
இந்த அறிமுகம் நட்பாக வளர்ந்து வந்த நிலையில் இவ்விருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். சரி இவர்கள் இருவரும் நண்பர்கள் தான் போல என ரசிகர்கள் நினைத்து கொண்டிருக்க, தற்போது தீடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இப்போது நடிகர் பிரவீன் மற்றும் நடிகை ஐஸ்வர்யாவின் திருமணத்தில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல இந்த புகைப்படங்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.