லட்சுமி அம்மா மரணத்திற்கு கண்ணன் தான் காரணம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் அதிர்ச்சி!

0
லட்சுமி அம்மா மரணத்திற்கு கண்ணன் தான் காரணம் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர் அதிர்ச்சி!
லட்சுமி அம்மா மரணத்திற்கு கண்ணன் தான் காரணம் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர் அதிர்ச்சி!
லட்சுமி அம்மா மரணத்திற்கு கண்ணன் தான் காரணம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் அதிர்ச்சி!

இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் பரிதவிக்கும் குடும்பத்தினரிடம் கண்ணன் தான் இதற்கெல்லாம் காரணம் என சிலர் கூற, இனி வரும் எபிசோடுகளில் கண்ணன் நிரந்தரமாக குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவதாக கூறப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில், மூர்த்தியின் அம்மா லட்சுமி திடீரென மரணமடைந்துள்ளதாக இந்த வார எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி வாரிசான கண்ணன், தனது வீட்டுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு வர, மனமுடைந்த மூர்த்தி குடும்பம் அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறது. தனது தவறை உணர்ந்து பார்க்கும் இடங்களில் எல்லாம் மன்னிப்பு கேட்கும் கண்ணனை ஒருவரும் வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அகிலன், அஞ்சலி என கலகலப்புடன் நடந்த வெண்பா வளைகாப்பு விழா – வைரலாகும் வீடியோ!

ஆனால் மூர்த்திக்கு தெரியாமல் கதிர், ஜீவா, மீனா, முல்லை, தனம் என அனைவரும் கண்ணனுக்கு உதவி செய்கின்றனர். மறுபக்கத்தில் கண்ணனின் செயலை ஏற்கமுடியாமல் இருந்த அவரது அம்மா லட்சுமி படுக்கையில் விழுகிறார். அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து 2 நாட்களுக்கு பிற்பாடு வீட்டுக்கு கூட்டி செல்கின்றனர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர். இதற்கு பின்பாக நன்றாக பேசி, சிரித்து கொண்டிருந்த லட்சுமி அம்மா திடீரென மரணமடைந்துள்ளார்.

இந்த மரணத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மொத்த குடும்பமும் திகைத்து நிற்கிறது. இறந்த லட்சுமியின் அருகில் அமர்ந்து கொண்டு அனைவரும் ஆளுக்கு ஒருபக்கத்தில் அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் அக்கம் பக்கத்தினர், கண்ணன் தான் இதற்கு காரணம். அவன் வீட்டை விட்டு போனதால் தான் இந்த அம்மா உடைஞ்சு போய்ட்டாங்க. இப்போ உயிரே போச்சு என பேசுகின்றனர். ஆனால் நடந்ததை அறியாத கண்ணன் தற்போது திருச்சிக்கு சென்றுள்ளார்.

ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது? கண்ணம்மா நினைக்கும் காரணங்கள்!

இனி கண்ணன் திரும்பி வருகையில் கண்டிப்பாக மூர்த்தி குடும்பத்தின் மொத்த கோபமும் கண்ணன் மீது திரும்ப வாய்ப்புள்ளது. இப்படி இருக்க கண்ணனின் தவறை மன்னிக்காத ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் கண்ணனை நிரந்தரமாக ஒதுக்கி வைக்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பம் தற்போது பிரிவை சந்திக்க உள்ளது. இப்படி ஒளிபரப்பாக இருக்கும் கதைக்களத்தை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் வரும் வார எபிசோடுகளில் காணமுடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!