வெண்பாவை வெளுத்து வாங்கிய சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட்!
விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய நாளுக்கான எபிசோடில் கண்ணம்மாவை தவறாக பேசிய வெண்பா, சௌந்தர்யாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்ட காட்சிகள் ரசிகர்களை சற்று குஷிப்படுத்தி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் புத்தம் புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு ஏற்படும் ஒவ்வொரு அவமானங்களையும் பார்த்து பார்த்து பழகிய மக்கள், வெண்பாவை ஒரு முழு வில்லியாகவே சித்தரித்து விட்டனர். சில நேரங்களில் அது நடிப்பு என்பதையும் மறந்து வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினாவையும் ரசிகர்கள் கண்டபடி திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தென்காசி டூ மாஸ்டர் பட வாய்ப்பு, தற்போது பிக் பாஸ் பிரபலம் – யார் இந்த சிபி?
என்றாலும் இது, வெண்பா கதாப்பாத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகத் தான் கருதப்படுகிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா மற்றும் பாரதி பேசுவதை கண்டால் ரசிகர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்களோ, அந்த அளவுக்கு வெறுப்பு வெண்பா மீது வருகிறது. குறிப்பாக ஏதாவதொரு இடத்தில் வெண்பா அடி வாங்குவது போலவும், அசிங்கமாக திட்டு வாங்குவது போலவும் ஒளிபரப்பாகும் காட்சிகளை கண்டால் ரசிகர்களுக்கு உற்சாகம் பொங்கி விடும்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2 பிரபல சீரியல்கள் நிறுத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை பற்றி தவறாக பேசிவிட்டு, வெண்பா சௌந்தயாவிடம் அறை வாங்குவதாக சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல இந்த காட்சிகளை கண்ட ரசிகர்கள், நேத்து கண்ணம்மா, இன்னிக்கி சௌந்தர்யா அம்மா, அப்போ நாளைக்கு என்றும் சௌந்தர்யாவுக்கு அடிச்சு பழகிடுச்சு வெண்பாவுக்கு அடி வாங்கி பழகிடுச்சு என்றும் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.