கண்ணம்மா இறந்து விட்டதாக ஹேமாவிடம் கூறும் பாரதி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

0
கண்ணம்மா இறந்து விட்டதாக ஹேமாவிடம் கூறும் பாரதி - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
கண்ணம்மா இறந்து விட்டதாக ஹேமாவிடம் கூறும் பாரதி - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
கண்ணம்மா இறந்து விட்டதாக ஹேமாவிடம் கூறும் பாரதி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று ஹேமா தனது அம்மாவின் பெயரை கூறியதும் பாரதி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். மறுபுறம் அஞ்சலிக்கு மீண்டும் நெஞ்சு வலி எடுப்பதால் அவரது உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் இன்று அஞ்சலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்படுகிறது. இதனால் அவர் மருத்துவரை அழைத்து கேட்கும் போது அவருக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதாகவும், அது குறித்து பேச வேண்டும் என்று மருத்துவமனைக்கு வர சொல்லுகிறார். பின் ஹேமா தனது அம்மாவின் பெயர் கண்ணம்மா என்று கூறுவதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். ஹேமாவிற்கு எப்படி தெரியும் என்று சௌந்தர்யா கேட்கிறார். அதற்கு ஹேமா தான் அப்பாவுடன் பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றதாகவும், அங்கு அம்மா பெயர் இருக்கும் இடத்தில் “கண்ணம்மா” என்று எழுதி இருந்ததாக ஹேமா கூறுகிறார். இதனை கேட்டு சௌந்தர்யா மற்றும் அஞ்சலி மகிழ்ச்சி அடைகின்றனர். இன்னும் பாரதியின் மனதில் கண்ணம்மா இருக்கிறாள் என்று நினைத்து சௌந்தர்யா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

ஆதார் கார்டுகளில் முக்கிய சேவைகள் நிறுத்தம் – UIDAI அறிவிப்பு!

பின், ஹேமா தனது அம்மா எப்படி இருப்பார் என்றும் ஏன் தன்னை இன்னும் பார்க்க வரவில்லை என்று கேட்கிறார். இப்படி ஹேமா பேசிக்கொண்டு இருக்கும் போது பாரதி வருகிறார். அவரும் இதனை கேட்டு விடுகிறார். பின், ஹேமா தனக்கு அம்மாவின் பெயர் தெரிந்து விட்டது என்றும், அவர் எப்போது வருவார் என்றும் கேட்கிறார். இதனால் பாரதி தனது அம்மாவை குழப்பமாக பார்க்கிறார். அப்போது ஹேமா தனது அம்மா பெயர் “கண்ணம்மா” என்று கூறுகிறார். இதனால் பாரதி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். அதே போல் சௌந்தர்யாவை கோபமாக பார்க்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து ஹேமாவிடம் கேட்கும் போது ஹேமா பாஸ்போர்ட் ஆஃபிஸில் நடந்தது பற்றி கூறுகிறார். இப்படியாக இருக்க, ஹேமா தனது அம்மா ஏன் தன்னை பார்க்க வரவில்லை என்றும் எப்போது வருவார் என்றும் பாரதியிடம் கேட்கிறார். அப்போது பாரதி, கண்ணம்மா இறந்து விட்டதாக ஹேமாவிடம் கூறி விடுகிறார். இதனை கேட்டு சௌந்தர்யா மற்றும் அஞ்சலி அதிர்ச்சி அடைய, ஹேமா அழுக ஆரம்பித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!