ஆதார் கார்டுகளில் முக்கிய சேவைகள் நிறுத்தம் – UIDAI அறிவிப்பு!
இந்திய தனித்துவ அடையாள ஆவணமான ஆதார் அட்டை, பல சேவைகளுக்கு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டை சேவைகளில் தற்போது 2 முக்கிய சேவைகளை நிறுத்துவதாக UIDAI அறிவித்துள்ளது.
ஆதார் சேவைகள்
அரசு சேவைகள் முதல் வங்கி, மொபைல் சேவைகள் உள்ளிட்ட பலவற்றிற்கு ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆதாரின் சேவைகளை பயனர் ஒருவர் வீடுகளில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் செயல்படுத்தி கொள்ள முடியும். இந்த ஆன்லைன் வழி ஆதார் சேவைகளை UIDAI தற்போது எளிதாகி உள்ளது. இவ்வகை வசதிகள் மூலம் பலரும் ஆன்லைன் வழியாக ஆதார் அட்டைகளில் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை மாற்றிக்கொள்ள முடியும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கக்கோரி வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு!
அந்த வகையில் தனித்துவ அடையாள அட்டை நிறுவனமான UIDAI அதன் இரண்டு சேவைகளை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பொது மக்கள் மேற்கொள்ளும் சில சேவைகளுக்கு சிக்கல்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முகவரி சரிபார்ப்பு கடிதம் மூலம் ஆதார் அட்டைகளில் முகவரி புதுப்பிக்கும் வசதியை UIDAI தடை செய்ய உள்ளதாம். முன்பெல்லாம் சொந்த வீடு இல்லாத ஆதார் பயனர்கள் தங்களது முகவரியை ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள முடிந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் UIDAI வலைதளத்தில் இருந்து முகவரி புதுப்பித்தல் சேவைகள் நிறுத்தப்பட்டால், ஆதார் பயனர்களுக்கு பெருமளவு சிக்கல்கள் ஏற்படும். ஆனால் https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf வலைதளத்தில் இருந்து முகவரிகளை மாற்றி கொள்ள முடியும் என UIDAI அறிவுறுத்தியுள்ளது. அடுத்ததாக ஆதார் அட்டையை ரீபிரிண்ட் செய்யும் சேவைகளையும் UIDAI நிறுத்தி உள்ளது. அதனால் தற்போதுள்ள ஆதார் அட்டை களுக்கு பதிலாக PVC பிளாஸ்டிக் அட்டைகள் கொடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடப்படுகிறது.