வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் வங்கிகள் இயங்காது – ஊழியர்கள் ஸ்டிரைக்!

0
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் வங்கிகள் இயங்காது - ஊழியர்கள் ஸ்டிரைக்!
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் வங்கிகள் இயங்காது - ஊழியர்கள் ஸ்டிரைக்!
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் வங்கிகள் இயங்காது – ஊழியர்கள் ஸ்டிரைக்!

நாடு முழுவதும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வேலைநிறுத்த போராட்டம்:

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்தியஅரசின் கொள்கை, ஓய்வூதியம், மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சிஹெச் வெங்கடாச்சாலம் கூறுகையில், இந்த வேலை நிறுத்த போராட்டம் வங்கி ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. அக்டோபர் 25-க்கு பதில் வேறு வேலை நாள்!

Exams Daily Mobile App Download

மேலும் அவர் கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள், வங்கி நடவடிக்கைகளை அவுட்சோர்சிங் செய்வதாக தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்வேறு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்பதால் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!