9000 வங்கி ஊழியர்கள் திடீர் வேலை நீக்கம் – அறிவிப்பு வெளியீடு!
UBS வங்கி சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வங்கியான Credit Suisse வங்கியை வாங்க திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், Credit Suisse வங்கி முடிவு செய்துள்ளதுபடி 9000 வங்கி ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வேலைநீக்கம்:
சுவிஸ் நாட்டின் மிகப் பெரிய வங்கியான Credit Suisse அதற்கான புதிய நிதியை திரட்ட முடியாமல் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுவிட்டது. இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக மத்திய வங்கியான Swiss National வங்கியில் இருந்து கிட்டத்தட்ட 54 பில்லியன் டாலர் கடனாக பெற்றது. ஆனாலும், Credit Suisse வங்கி நிலவரம் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால், வங்கியை பகுதியாக அல்லது மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது.
தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு ?- ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்!
பேச்சுவார்த்தையின் முடிவில் UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியுடன் இணைக்கப்பட போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், UBS வங்கி 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு கிரெடிட் சூயிஸ் வங்கியை வாங்க இருக்கிறது. மேலும், கிரெடிட் சூயிஸின் முதலீட்டு வங்கி வணிகத்தை UBS குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு Credit Suisse வங்கி அறிவித்திருந்த 9000 வங்கி ஊழியர்களுக்கான வேலைநீக்கத்தை UBS வங்கி நடைமுறைப்படுத்த இருக்கிறது.