தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு ?- ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்!
தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்புகளில் ஒன்றாக பழைய ஓய்வூதிய திட்டம் இருந்தது. ஆனால் அது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் வெளியாகாததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பழைய ஓய்வதிய திட்டம்
2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தாண்டு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பல துறைகளை சார்ந்த பல அறிவிப்புகள் வெளியான நிலையில், அதில் மக்களுக்கு பல நல்ல அறிவிப்புகள் இருந்தன. இருந்தாலும் அரசு ஊழியர்களின் ஒரே எதிர்பார்ப்பான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என நினைத்த நிலையில் பட்ஜெட்டில் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதனால் அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் படும் என திமுக சொன்ன நிலையில் தற்போது வரை அது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்களை மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், அரசு ஊழியர்களின் விவரங்களை சேகரிக்க பிப். 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது ஊழியர்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளது.
Exams Daily Mobile App Download