பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator ஆகிய பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.09.2021 க்குள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மேற்கண்ட வங்கி பணிகளுக்கு 190 பணியிடங்கள் காலியாக உள்ளன. AFO & IT Support Admin பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 25 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய தெளிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN Job “FB Group” Join Now
அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Any Degree/ B.E/ B.Tech/ Graduate/ Postgraduate degree/ PG diploma இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். UR/ EWS/ OBC விண்ணப்பதார்களுக்கு ரூ.1,180/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரிகளுக்கு ரூ.180/- மற்றும் PWD/ Women விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இன்னும் கால தாமதிக்காமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.