செப்.8 முதல் 12 வரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கி விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி இந்த வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. சில நகரங்களில் மட்டுமே விடுமுறை தினங்கள் மாறுபடுகின்றது.
வங்கி விடுமுறை:
இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டின் தொடக்கத்திலேயே மாதாந்திர விடுமுறை தினங்களின் பட்டியலை வெளியிட்டு விடும். அதன் பின்னர், மாதந்தோறும் நினைவூட்டல் அறிக்கையின் மூலம் விடுமுறை தினம் அறிவிக்கப்படும். அந்த வகையில் செப்டம்பர் மாதம் முழுவதும் 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6 நாட்கள் வழக்கமான வார இறுதி விடுமுறை தினங்களாகவும், 6 நாட்கள் பண்டிகை விடுமுறையாகவும் உள்ளது.
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் தேவையா?
இந்நிலையில், இந்த வாரத்திலேயே தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நகரங்களில் இந்த 5 நாட்களில் தொடர்ச்சியாக இல்லாமல் விடுமுறை தினங்கள் குறைகிறது. மாநிலங்களில் பண்டிகை கொண்டாடப்படும் தினங்கள் மாறுபடுவதே இதற்கு காரணம். முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி ஒரு சில மாநிலங்களில் செப்டம்பர் 10ம் தேதி அன்றும், சில மாநிலங்களில் இரண்டு தின கொண்டாடப்படும் பண்டிகையாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தின பட்டியலை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- செப்டம்பர் 8 – கௌஹாத்தியில் ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 9 – ஹரித்தலிகா தீஜ் காரணமாக கேங்டாக்கில் வங்கி கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- செப்டம்பர் 10 – ஆமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 11 – இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து நகரங்களிலும் வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை