செப்டம்பரில் இன்னும் 5 நாட்களுக்கு வங்கி விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்காட்டியின் படி செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள 12 நாட்களில் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கி விடுமுறை
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் அந்தந்த மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இம்மாதத்தில் இதுவரை கிட்டத்தட்ட 7 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் – கோரிக்கை!
இந்த விடுமுறை பட்டியலில், வார இறுதி விடுமுறை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்கள், மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறைகளும் அடங்கும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள 12 நாட்களில் சுமார் 5 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதில் 3 நாட்களுக்கு மட்டும் வங்கிகள் செயல்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தடுப்பூசி போடாதோருக்கு பேருந்துகளில் அனுமதி இல்லை – செப்.20 முதல் புதிய கட்டுப்பாடுகள்!
அதனால் வங்கிகளின் விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்காட்டியின் படி,
- செப்டம்பர் 19 ஆம் தேதி – ஞாயிறு, பொது விடுமுறை.
- செப்டம்பர் 20 ஆம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகையை முன்னிட்டு கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
- செப்டம்பர் 21 ஆம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 25 ஆம் தேதி – நான்காவது சனிக்கிழமை, பொது விடுமுறை.
- செப்டம்பர் 26 ஆம் தேதி – ஞாயிறு, பொது விடுமுறை.