தமிழகத்தில் படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் – கோரிக்கை!
தமிழகத்தில் வேலையில்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ட்வீட் செய்துள்ளார். நிதி நெருக்கடியை சரி செய்ய திருத்தப்பட்ட சட்டம் ஒன்று இன்றைய சூழலுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு கோரிக்கை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரவ ஆரம்பித்திருந்த கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வந்தனர். அரசும் நிதி நெருக்கடியை சந்தித்தது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு கடந்த 20.5.2020 அன்று பிறப்பிக்கப்பட்டு 24.10.2020 அன்று ஒரு சட்டம் திருத்தப்பட்டது. இந்த சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதற்கும், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாதோருக்கு பேருந்துகளில் அனுமதி இல்லை – செப்.20 முதல் புதிய கட்டுப்பாடுகள்!
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. தற்போது இது குறித்து பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தினை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக 20.05.2020 இல் பிறப்பிக்கப்பட்டு, 24.10.2020 இல் திருத்தம் செய்யப்பட்ட நிதித்துறை அரசாணை எண் 382 இல் தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய சூழலுக்கு பொருந்தாதவை!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் அறிவிப்பு!
கடந்த ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட அரசாணைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் ‘புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசிற்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.