தடுப்பூசி போடாதோருக்கு பேருந்துகளில் அனுமதி இல்லை – செப்.20 முதல் புதிய கட்டுப்பாடுகள்!
குஜராத் மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடாத மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு தடை
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்திருக்கும் சூழலில், சில மாநிலங்களில் மட்டும் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் இருந்து கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அகமதாபாத் மாநகராட்சி கமிஷனர் முகேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் அகமதாபாத் நகரத்தில் பல்வேறு நகராட்சி சேவைகளை பெறுவதற்கு பொது மக்கள் ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் அறிவிப்பு!
மேலும் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் சில பொது வசதிகளை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான வழிகாட்டுதல் தொடர்பாக அகமதாபாத் மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ‘இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை எடுக்காதவர்கள் பொது போக்குவரத்து அல்லது குடிமை கட்டிடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த வகையில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் போக்குவரத்து சேவை, விரைவு பேருந்து போக்குவரத்து சேவைகளை இந்த மக்கள் பயன்படுத்த முடியாது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவியேற்பு – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கன்காரியா ஏரி முகப்பு, சபர்மதி ஆற்றங்கரை, நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகம் போன்ற இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட இடங்களுக்கு வரும் பொது மக்களிடம் தடுப்பூசி தொடர்புடைய சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றும் அதிகரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் குஜராத்தில் நேற்று (செப்டம்பர் 17) ஒரு நாளில் 25 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.