தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் அறிவிப்பு!
தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் விகிதம் குறைவாக உள்ளதாக காரணமாக தென் மாவட்ட ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பணியிட மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவியேற்பு – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் தென் பகுதிகளில் மாணவர்களின் விகிதத்தை காட்டிலும், ஆசிரியர்கள் விகிதம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மாணவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் வட மாவட்டங்களில் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதிரடியாக விலை குறைந்த ஆபரணத் தங்கம் – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறியதுடன் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் குறித்து கூறியுள்ளார். கொரோனா காலங்களில் தனியார் பள்ளிகள் ஊதியம் சரியாக வழங்காமல் இருப்பதாக வந்த தகவலின்படி போதிய ஊதியம் வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.