பொங்கலையொட்டி 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!! 

0
பொங்கலையொட்டி 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு விவரம் இதோ!! 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
 வங்கி விடுமுறை:

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, ஜன.14(போகி பண்டிகை), ஜன.15 (பொங்கல் பண்டிகை), ஜன.16 (மாட்டு பொங்கல்), ஜன.17 ( உழவர் திருநாள்) ஆகிய 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கிக்கு செல்ல திட்டமிடும் வாடிக்கையாளர்கள் ஜன.18 முதல் வங்கியின் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டாலும் மொபைல் வங்கி சேவைகள், ATM சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!