சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு தடை – காவல் துறை அதிரடி உத்தரவு!!

0
சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு தடை - காவல் துறை அதிரடி உத்தரவு!!
சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு தடை - காவல் துறை அதிரடி உத்தரவு!!
சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு தடை – காவல் துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவம்பர் 6ம் தேதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கலவரம் ஏதும் ஏற்படாத வகையில் தமிழக காவல்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பேரணிக்கு தடை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நிலவி வருகிறது. மேலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கோரி வழக்கு தொடுத்தது. இதற்கு நீதிமன்றம் தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஆனால் பேரணி நடத்த அனுமதி வழங்கினால் தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் மீண்டும் இந்த உத்தரவுக்கு எதிராக அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி நீதிமன்றம் வருகிற அக்டோபர் 2ம் (நாளை) தேதிக்கு பதிலாக நவம்பர் 6ம் தேதி அன்று பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்த உத்தரவை மீறி தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோர்ட் எச்சரித்துள்ளது. அதனால் நவம்பர் 6ம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருமாவளவனின் எதிர் மனித சங்கிலி உள்ளிட்டவை நடைபெற இருப்பதால் சாதி, மத கலவரம் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் காவல் துறையினரால் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுக்கு தான இவ்வளவு நாள் Wait பண்ணுனோம் – வாட்ஸ் அப்பில் இனி Deleted மெசேஜை படிக்கலாம்!

Exams Daily Mobile App Download

இதில் முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பதற்ற சூழ்நிலை நிலவி வருவதால், சென்னை மாநகராட்சியில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த (நேற்று) செப்.30 முதல் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதாவது இந்த தடையானது அக்டோபர் 15ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!