தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கவும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பால் விற்பனை:
இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை நாம் ஒரு முறை பயன்படுத்தி விட்டு அதை தூக்கி எரியும் போது அவை மண்ணில் புதைகிறது. இந்த பிளாஸ்டிக் எளிதில் மக்கும் தன்மை அற்றவை என்பதால் மண்ணுக்கு தீங்கு விளைவிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாடு நம்முடைய புவி சூழலையும் பாதிக்கிறது. மேலும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கோபியை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தும் ராதிகா – அடுத்தடுத்து புதிய திருப்பங்கள்!
இந்த நிலையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் வாட்டர் கேன்களின் பால் விற்பனை செய்தால் அதன் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ரயில், பேருந்து நிலையம் மற்றும் தமிழகத்தின் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்