செப்டம்பர் 30 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாஸ்டிக் தடை:
பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. நாம் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் மக்காமல் மண்ணில் நீண்ட காலம் புதையுண்டு மண்ணின் வளத்தை கெடுக்கிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வாழை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஃபிஷிங் மோசடி எச்சரிக்கை!
கடந்த மாதம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு இந்தியாவில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பைகள், கோப்பைகள், தட்டுகள் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்படும். இந்த நடைமுறை 2022 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் 2023ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.