2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடையா? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!
கடந்த 2016-ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை தடுக்கும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு மாறாக தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது இந்த 2000 நோட்டுகள் அச்சடிக்கபடுவதில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சகம் விளக்கம்
இந்திய நாட்டில் கறுப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கறுப்பு பணம் என்பது இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்த கடமைப்பட்டவர்கள் வரி ஏய்ப்பு மூலம் தங்கள் சொத்துக்களை உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பத்தாகும். கறுப்பு பணம் மீட்க பட்டால் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்றும் வரி வருமானமும் அதிகரிக்கும். இவ்வாறு வரி வருவாய் அதிகரிப்பதன் மூலம் நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு வரி செலுத்தும் வரம்பில் சில சலுகைகள் பெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – கால அட்டவணை வெளியீடு!
அதனால் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் அதிக சொத்துக்களை வைத்திருப்பவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை செய்கிறது. அதன் மூலம் சிலர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசு பறிமுதல் செய்கிறது. அதனை தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8 மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அரசு தெரிவித்தது. மேலும் அதற்கு மாறாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் மாநிலங்கவையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கம் பற்றிய கேள்வி எழுந்தது.
டிசம்பர் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
இதற்கு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது, “இதுவரை ரிசர்வ் வங்கி 6,72,600 ரூபாய் மதிப்பிலான 2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன அதாவது சுமார் 3363 மில்லியன் 2000 நோட்டுகளை அச்சடித்தது” என்று கூறியுள்ளார். மேலும் கடந்த மாதம் 26-தேதி நிலவரப்படி தற்போது நாட்டில் 2233 மில்லியன் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்றும் தெரிவித்தார். இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் 1.75 சதவீதம் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அத்துடன் 2018-2019 நிதி ஆண்டிற்கு பிறகு புதிதாக 2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் மேலும் 2000 நோட்டுகளை அச்சடிப்பதற்கான தேவையும் ஏற்படவில்லை என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.