தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடங்களை கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது. அதனால் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டது. மேலும் கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை முன்வைப்பு!

அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் விடுமுறை வழங்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட அரையாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசிடம் ஆசிரியர் அமைப்பு கோரிக்கை வைத்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் ஜனவரி 3ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – A டூ Z தகவல்கள் இதோ!

ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடப்பகுதியை முடித்திருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இதனால் இந்த விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் நேரடி வகுப்புகள் அல்லது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற கூடாது என்றும் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு மாணவர்கள் வரக்கூடாது என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கண்ட விடுமுறை நாட்களில் பள்ளிகள் நடைபெற்றால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!