மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அகவிலைப்படி (DA) அரியர் தொகை பற்றிய முக்கிய தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அகவிலைப்படி (DA) அரியர் தொகை பற்றிய முக்கிய தகவல்!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அகவிலைப்படி (DA) அரியர் தொகை பற்றிய முக்கிய தகவல்!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அகவிலைப்படி (DA) அரியர் தொகை பற்றிய முக்கிய தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அரியர் தொகை கடந்த ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

அரியர் தொகை

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி நிலை உருவானது. இந்த நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அரியர் தொகை கடந்த ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்த சூழலில் ஒவ்வொரு மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது உறுதி – அமைச்சர் வாக்குறுதி!

அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அரியர் தொகைக்கான அறிவிப்பு வெளிவரவில்லை. மேலும் இந்த தொகை சுமார் ரூ.2 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் அரசு ஊழியர்கள் இதனை வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி அரசு இது தொடர்பாக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு தீர்வு அளிக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளர் மிஸ்ரா ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

காவலர் ஆவது உங்கள் கனவா? CISF 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அவர் கூறியதாவது, அரசு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அத்துடன் நிதி அமைச்சகம், செலவினத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜெ.சி.எம் கூட்டு சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் அகவிலைப்படி தொகை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். இந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அதன்படி அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 3% அதிகரிக்கப்பட்டு 34% அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். அத்துடன் அரியர் தொகையை வழங்க முடிவு செய்தால் லெவல்-1 ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை வழங்கப்படும் என்றும் லெவல்-13 ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!